வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன், ‘டுவென்டி–20’ அரங்கில், ‘சூப்பர் ஓவரில்’ ‘மெய்டன்’ வீசிய முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

வெஸ்ட் இண்டீசில், கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) தொடர் நடக்கிறது. கயானாவில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ரெட் ஸ்டீல் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. 

பின் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுக்க, போட்டி ‘டை’ ஆனது. இதனையடுத்து போட்டியின் முடிவு ‘சூப்பர் ஓவருக்கு’ சென்றது.

‘சூப்பர் ஓவரில்’ இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படும். அதிக ரன்கள் எடுக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

முதலில் களமிறங்கிய காயானா அணி, ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. பின் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கோடு வந்த ரெட் ஸ்டீஸ் அணிக்கு, கயானாவின் சுனில் நரைன் பந்துவீசினார். 

முதல் நான்கு பந்தில் ஒரு ரன் கூட வழங்காத நரைன், 5வது பந்தில் பூரனை அவுட்டாக்கினார். கடைசி பந்திலும் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. இதனையடுத்து கயானா அணி வெற்றி பெற்றது. 

இதன்மூலம் ‘டுவென்டி–20’ வரலாற்றில், ‘சூப்பர் ஓவரை’ ‘மெய்டனாக’ வீசிய முதல் பவுலர்கள் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

சுனில் நரைன் ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடுகிறார். இவரது ‘சுழல் ஜாலம்’ கைகொடுக்க, 2012, 2014ல் கோல்கட்டா அணி கோப்பை வென்றது.

0 comments:

Post a Comment