தென் ஆப்ரிக்கா மீண்டும் நம்பர் 1

பரபரப்பான கொழும்பு டெஸ்ட் போட்டியை டிரா செய்த தென் ஆப்ரிக்க அணி, தொடரை 1–0 என கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் மீண்டும் நம்பர்–1 இடத்தை பெற்றது. இலங்கை அணியின் போராட்டம் வீணானது. இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற தென் ஆப்ரிக்கா 1–0 என முன்னிலை வகித்தது.  இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 421, தென் ஆப்ரிக்கா 282 ரன்கள்...

முற்றுகிறது ஜடேஜா விவகாரம் - ஐ.சி.சி., அபராதத்தை ஏற்க பி.சி.சி.ஐ., மறுப்பு

தள்ளு’ விவகாரத்தில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜாவுக்கு ஐ.சி.சி., விதித்த அபராதத்தை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்தது. இதனால், பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இடையே மோதல் வெடித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. இதன் இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.       அப்போது ஜடேஜாவை பிடித்து...

தள்ளு விவகாரம் தள்ளிவைப்பு

ரவிந்திர ஜடேஜா, ஆண்டர்சன் ‘தள்ளு’ விவகாரம் தொடர்பான விசாரணை, ஆக., 1க்கு தள்ளிவைக்கப்பட்டது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நாட்டிங்காமில் முதல் டெஸ்டில் பங்கேற்றது.  இப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜடேஜாவை பிடித்து தள்ளியுள்ளார் ஆண்டர்சன். இதுகுறித்து ஆண்டர்சன் மீது ‘லெவல்–3’, ஜடேஜா மீது ‘லெவல்–2’...

ஷரபோவா கருத்துக்கு சச்சின் பதில்

லண்டனில் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நேரடியாக கண்டுகளித்தார்.  அப்போது. ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, ‘சச்சினை யார் என்று தெரியாது’ என, கூறினார். சதத்தில் சதம் உட்பட பல சாதனைகள் படைத்த சச்சின் பற்றி, ஷரபோவா சொன்ன இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து சச்சின் கூறுகையில்,‘‘ஷரபோவா கருத்தில் அவமதிப்பு எதுவும் இல்லை. அவர், கிரிக்கெட் போட்டியை பார்ப்பவர் அல்ல,’’ என்றார்.  ...

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன், ‘டுவென்டி–20’ அரங்கில், ‘சூப்பர் ஓவரில்’ ‘மெய்டன்’ வீசிய முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். வெஸ்ட் இண்டீசில், கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) தொடர் நடக்கிறது. கயானாவில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ரெட் ஸ்டீல் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.  பின் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுக்க, போட்டி...

இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வீரர் யார்?

பிரேசில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுகலின் கதாநாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி உள்ளிட்டோர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாமல் போயிருக்கலாம்.  ஆனால் உலக கோப்பை போட்டியின் போது, ‘கூகுள்’ இணையதளத்தில் ரசிகர்களால் ஆர்வமுடன் அதிகமாக தேடப்பட்ட வீரர்களின் பட்டியலில் இவர்கள் தான் முன்னணியில் இருந்துள்ளனர்.  மேலும், உலக கோப்பை தொடர்பான செய்திகள், படங்கள் தேடல் 200 கோடி...

கேப்டனுக்கு பொருத்தமானவர் தோனி - சாப்பலுக்கு டிராவிட் பதிலடி

இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தோனி தான் பொருத்தமானவர். விராத் கோஹ்லி கேப்டனாக சரியான நேரம் வரவில்லை,’’ என, டிராவிட் தெரிவித்தார்.      கடந்த 2011 முதல் அன்னிய மண்ணில் பங்கேற்ற 12 டெஸ்டில் 10ல் தோற்ற இந்திய அணி, 2 போட்டிகளை ‘டிரா’ செய்தது. ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் டெஸ்டை ‘டிரா’ செய்தது.        இதனால், டெஸ்ட் அணிக்கு கேப்டனாக கோஹ்லியை நியமிக்க வேண்டும்...

ஓய்வு பெறுகிறார் ஜெயவர்தனா

டெஸ்ட் அரங்கில் இருந்து விடை பெற முடிவு செய்துள்ளார் இலங்கை வீரர் ஜெயவர்தனா.        இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனா, 37. கடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை போட்டியுடன், இந்த கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார்.  கடந்த 1997ல் இந்திய அணிக்கு எதிராக அறிமுகம் ஆன இவர், இதுவரை 145 டெஸ்டில், 11,493 ரன்கள் (33 சதம், 48 அரை சதம்) எடுத்தார்.  இதனிடையே, வரும் தென் ஆப்ரிக்கா (ஜூலை 16–24), பாகிஸ்தான் (ஆக., 6–18)...

அஷ்வின் என்ன குப்பைத்தொட்டியா?

முதல் டெஸ்டில் அஷ்வினை நீக்கியது புரியாத புதிராக உள்ளது. இவரை, ரோட்டின் ஓரத்தில் வைக்கப்படும் குப்பைத்தொட்டியை போல கருதுகின்றனர்,’’ என, மார்ட்டின் குரோவ் தெரிவித்தார். நாட்டிங்காமில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் தேர்வு ஏமாற்றம் அளித்தது. அனுபவ சுழற்பந்துவீச்சாளரான தமிழகத்தின் அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். இதன் காரணமாக, இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்தியா திணறியது.  இது குறித்து நியூசிலாந்து...

அசோக் திண்டாவுக்கு சிறந்த கிரிக்கெட் வீரர் விருது

மேற்கு வங்காள மாநில கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு விழா வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் சிறந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் 21 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. மேற்கு வங்காள வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது வழங்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் விர்திமான் சகா, ஜென்டில்மேன் வீரருக்கான கோப்பையை பெறுகிறார். முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுமந்திரனாத் குண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெறுகிறார்.  விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஜி.ஆர்.விஸ்வநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்...

பவுலர்கள் கையில் வெற்றி - டிராவிட் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், பவுலர்களின் செயல்பாட்டை பொறுத்து, இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும்,’’ என, முன்னாள் இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்தார்.       இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் வரும் ஜூலை 9ம் தேதி துவங்குகிறது.       இத்தொடர் குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் டிராவிட் கூறியது: இங்கிலாந்துக்கு...

28 ஆண்டுகளுக்கு பிறகு பெல்ஜியம் அணி கால் இறுதிக்கு தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி 2–வது சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்தது. இதில் ‘எச்’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த பெல்ஜியம் ‘ஜி’ பிரிவில் 2–வது இடத்தை பிடித்த அமெரிக்கா அணிகள் மோதின. இரு அணி வீரர்களுமே கால் இறுதியில் நுழைய வேண்டும் என்ற ஆக்ரோஷத்துடன் விளையாடினார்கள். இதனால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. பெல்ஜியம், அமெரிக்க வீரர்கள் தங்களுக்கு கிடைத்த கோல் வாய்ப்பை தவறவிட்டனர். மேலும் பெல்ஜியம் அணியின் கோல் அடிக்கும் வாய்ப்பை அமெரிக்க கோல்கீப்பர் டிம்ஹவார்டு பலமுறை தகர்த்தார். இதேபோல பெல்ஜியம்...