பாரத ரத்னா சச்சின்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு இன்னும் "பாரத ரத்னா' விருது வழங்கப்படவில்லை. இருப்பினும் ஏற்கனவே இவர், இந்தியர்களின் "பாரத ரத்னா'வாக விளங்குகிறார்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.

பத்தாவது உலக கோப்பை தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதன்மூலம் ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்ற சச்சினின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது.

இம்முறை பேட்டிங்கில் அசத்திய இவர், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தார். இவருக்கு, நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருது இந்த ஆண்டு வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


இதுகுறித்து இந்திய வீரர் டிராவிட் கூறியதாவது:

கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு, இதுவரை "பாரத ரத்னா' விருது வழங்கப்படவில்லை. "பாரத ரத்னா' விருது பெற என்ன தகுதி வேண்டும் என்பது எனக்கு தெரியாது. இருப்பினும், ஏற்கனவே இவர் இந்தியர்களின் உள்ளத்தில் "பாரத் ரத்னா'வாக திகழ்கிறார்.

கடந்த மூன்று ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினேன். இம்முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாட உள்ளேன். ஏற்கனவே ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடி இருப்பதால், எந்த அணிக்காக விளையாடுகிறோம் என்பது பற்றி கவலை இல்லை.

தென் ஆப்ரிக்க தொடருக்கு பின், ஐ.பி.எல்., தொடருக்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனது உடற்தகுதியில் முழுகவனம் செலுத்தி வருகிறேன். இம்முறை, ஐ.பி.எல்., தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment