இந்திய ஹீரோக்கள் பெற்றது ஒரிஜினல் உலகக்கோப்பையா?

28 ஆண்டு கால தவத்திற்கு பின் 120 கோடி மக்கள் கனவு ஏப்ரல் 2ம் தேதியன்று நனவானது. இலங்கையை வீழ்த்தி இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது.


தங்கள் வெற்றிக் களிப்பை, கைகளில் உலகக்கோப்பையை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்து கொண்டாடினர் இந்திய வீரர்கள். ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல் தற்போது ஒரு பூதாகர சர்ச்சை கிளம்பியுள்ளது. அது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உலகக்கோப்பை ஒரிஜினல் தானா என்பது.



பிரச்னை :


உலககோப்பையை இந்தியா கொண்டு வர முறையான வரி செலுத்தாதால் உலககோப்பையை மும்பை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் , இறுதிப் போட்டியை வென்று வெற்றி வாகை சூடிய இந்திய அணிக்கு வழங்கப்பட்டது அதன் மாதிரி தான் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.



வெளிநாட்டிலிருந்து எந்தப் பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும், அதன் உண்மையான மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை சுங்க வரியாக கட்ட வேண்டும். ஆனால் ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்தபோது வரியாக செலுத்தப்பட வேண்டிய ரூ. 22 லட்சம் கட்டப்படவில்லை.

இதையடுத்து

விமான நிலையத்தில் வைத்து மும்பை சுங்கத்துறையினர் கோப்பையைக் கைப்பற்றி விட்டனர் என்பது புகார். தற்போது இந்திய வீரர்களிடம் இருப்பது நகல் கோப்பை என்றும், ஒரிஜினல் கோப்பை இன்னும் சுங்கத்துறை வசம்தான் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் நிலவுகின்றன.



ஐ.சி.சி., மறுப்பு :


இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஐ.சி.சி., இறுதிப் போட்டியில் வெற்றிவாகை சூடிய இந்திய அணிக்கு வழங்கப்பட்டது உண்மையான உலக கோப்பை தான் என தெரிவித்துள்ளது.


கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பது, உலககோப்பை போட்டியை பிரபலப்படுத்த பயன்படுத்தப்பட்ட மாதிரி கோப்பை என்றும் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment