சச்சின் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை எட்டினார் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் போட்டியில் அவரது 47-வது சதம் இது.


இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங், மார்க் வாஹ், இந்தியாவின் கங்குலி ஆகியோர் 4 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். இவர்களில் மார்க் வாஹ், கங்குலி ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்டனர்.


6-வது உலகக் கோப்பையில் விளையாடும் சச்சின், அதிக சதம் மட்டுமின்றி, அதிக அரை சதங்கள் (13) அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார்.

உலகக் கோப்பையில் இதுவரை 38 ஆட்டங்களில் விளையாடியுள்ள சச்சின் 1,944 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங் 41 ஆட்டங்களில் 1,577 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 98 சதங்கள் அடித்துள்ளார் சச்சின்.

0 comments:

Post a Comment