சேவாக், யூசுப் வெற்றியை தீர்மானிக்கக் கூடியவர்கள்

இந்திய வீரர்கள் சேவாக், யூசுப் பதான் ஆகியோர் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான வீரர்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெய்ப்பூருக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் இதுகுறித்து மேலும் கூறியது:


நம்முடைய அணி சமபலம் நிறைந்த அணி. சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம். சேவாக், யூசுப் பதான் ஆகியோர் இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய வீரர்களாக இருப்பார்கள்.


இடது கை சுழற்பந்து வீச்சாளரோடு களமிறங்கினால் அது நமக்கு சாதகமாக இருக்கும். இப்போது பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பதால் மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

நமக்கு 10-வது வீரராக களமிறங்கும் ஹர்பஜன் சிங் கூட சிறப்பாக ஆடி வருவதால் கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களை குவிக்கக் கூடிய தகுதியுள்ளது.


தோனி அனுபவம் வாய்ந்த வீரர். ஒரே விக்கெட் கீப்பரோடு களமிறங்குவதைப் பற்றி கவலைப்படவில்லை.

உலகக் கோப்பை முழுவதும் விக்கெட் கீப்பர் பணியை திறம்படச் செய்வதற்கு தோனி தகுதியானவர் என்றார்.

0 comments:

Post a Comment