11 பேர் அணியில் இடம் பெறுவது யார்?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதே தற்போது அதிக எதிர்பார்ப்பாக உள்ளது. தொடக்க வீரர்களான தெண்டுல்கரும், ஷேவாக்கும் களம் இறங்குவார்கள்.

3-வது வீரராக காம்பீரும், 4-வது வீரராக யுவராஜ்சிங்கும், 5-வது வீரராக கேப்டன் டோனியும் களம் இறங்குவார்கள். 6-வது 7-வது வீரருக்கு போட்டி உள்ளது. வீராட் கோக்லி, சுரேஷ் ரெய்னா, யூசுப்பதான் ஆகியோர் இந்த வரிசையில் இடம்பெறுவார்கள்.

இதில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் யூசுப்பதான் 7-வது வீரராக களம் இறங்கி அபாரமாக விளையாடி “சதம்” அடித்தார். இதனால் யூசுப்பதான் இடம் பெறுவது உறுதியாகி விட்டது.

அவர் 7-வது வீரராக களம் இறங்குவார். 6-வது வீரருக்கான இடத்தில் கோக்லி, ரெய்னாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதை சுரேஷ் ரெய்னாவே ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

11 பேர் கொண்ட அணியில் யார் இடம்பெறுவது என்பது தொடர்பாக எனக்கும், வீராட் கோக்லி மற்றும் யூசுப்பதானுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. என்னை பொறுத்த வரை இந்திய அணி வெற்றி பெறு வதுதான் மிகவும் முக்கியம்.

அணியில் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். 6 மற்றும் 7-வது வீரராக ஆடி நான் 25-30 ரன் வரை எடுத்து இருக்கிறேன். ஆனால் இதை விட பெரிய ஸ்கோரை எடுக்க முடியும் என்று எனக்கு தெரியும்.

உலக கோப்பை போட்டியில் மிகப்பெரிய ரன்னை குவிக்க ஆவலுடன் இருக்கிறேன். உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெறுவது மிகப்பெரிய வாய்ப்பு. எந்த ஒரு வீரருக்கும் உலக கோப்பையில் ஆடுவது கனவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment