இலங்கை கோப்பை வெல்ல வேண்டாம்

ஒவ்வொரு அணியும் கோப்பை வெல்ல வேண்டும் என, அந்தந்த தேசத்தின் பத்திரிகைகள் வாழ்த்துகின்றன. ஆனால், இலங்கை அணி கோப்பை வெல்ல வெல்ல வேண்டாம் என்று, அந்நாட்டு பத்திரிகை ஒன்று அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள விளையாட்டு நிர்வாகங்களில் மிகவும் பணக்கார அமைப்பாக இருப்பது இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,). இதன் தலைவராக டி சில்வா இருந்து வருகிறார். எஸ்.எல்.சி.,யில் நிர்வாகிகள் தேர்தல் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து இலங்கையின் முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரத்னாயகே கூறுகையில்,"" அதிகளவில் ஊழல்கள் நடப்பதில் முதல் நிர்வாகம் எஸ்.எல்.சி.,க்கு தான்,'' என்றார்.

இந்நிலையில் <உலக கோப்பை தொடர் குறித்து இலங்கையில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில்,"" இலங்கை அணியின் கேப்டன் சங்ககரா, மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக கோப்பை வெல்லக்கூடாது,'' என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இதன் செய்தி ஆசிரியர் ரஸ்சல் பாலிபேன் கூறுகையில்,"" என்னை துரோகி என்று கூறினாலும் சரி, காட்டி கொடுப்பவன் என்றாலும் சரி, இதற்காக என்னை பிடித்துச் சென்று தூக்கில் கூட போடுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இலங்கை அணி கோப்பை வெல்லக் கூடாது.

ஒருவேளை கோப்பை வென்றால் என்ன நடக்கும், சற்று நினைத்துப்பாருங்கள், தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாகிகளே தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள். ஏனெனில், அவர்களது நிர்வாகத் திறமையால் தான் உலக கோப்பை வெல்ல முடிந்தது என்று கூறுவார்கள்,'' என்றார்.

0 comments:

Post a Comment