கங்குலியின் கனவு தகர்ந்தது

இந்திய அணியின் "மாஜி' கேப்டன் கங்குலியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. இவர், நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க இயலாது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் 2008, 2010 தொடரில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் கங்குலி. நான்காவது தொடருக்கான ஏலத்தில் கோல்கட்டா உட்பட, 10 அணிகளின் உரிமையாளர்களில், ஒருவர் கூட இவரை ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்நிலையில், கொச்சி அணி கங்குலியை சேர்த்துக்கொள்ள முன்வந்தது. இதற்கு மற்ற 9 ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்கள் அனுமதி கொடுக்க வேண்டும். அப்போது தான் கங்குலியை சேர்க்க முடியும்.

இது குறித்து பி.சி.சி.ஐ., சார்பில் ஐ.பி.எல்., அணி நிர்வாகங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், கங்குலிக்காக விதியில் மாற்றம் செய்ய மும்பை, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற கங்குலியின் கனவு நிறைவேறாமல் போனது. இது குறித்து ஐ.பி.எல்., தலைவர் சிராயு அமின் கூறுகையில்,""நேற்று நடந்த ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் கங்குலி பற்றி விவாதிக்கப்பட்டது.

விதிமுறைப்படி ஏலத்தில் இடம் பெற்ற வீரர்களை, அதற்கு வெளியே தேர்வு செய்ய முடியாது. இந்த விதியை தளர்த்த மற்ற அணிகள் ஒத்துக் கொள்ளாததால் கங்குலிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது,''என்றார்.


பாண்டேக்கு தடை

ஐ.பி.எல்., பெங்களூரு அணிக்காக விளையாடியவர் மனிஷ் பாண்டே. இவருக்கு இம்முறை ரூ. 20 லட்சம் மட்டுமே தர முன் வந்தது. இதையடுத்து "சகாரா புனே வாரியர்ஸ்' அணிக்கு மாற முடிவு செய்தார். இவர், விதிமுறைகளை மீறி பல்வேறு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பெங்களூரு அணி நிர்வாகம் குற்றம்சாட்டியது.

இது பற்றி ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின், புனே அணிக்காக விளையாட அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், விதிமுறைகளை மீறியதற்காக நான்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment