எங்கு சென்றனர் இந்திய வீரர்கள் - பிரிஸ்பேன் சர்ச்சை தீரவில்லை

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவின் ‘டாப் ஆர்டர்’ வீரர்கள் சரிந்த போது, பின் வரிசை வீரர்கள் இஷாந்த் சர்மா, வருண் ஆரோன் மைதானத்திலேயே இல்லையாம்.

பிரிஸ்பேன் டெஸ்ட் நான்கு நாட்களில் முடிந்துவிட்டது என்றாலும், இந்த பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் மூன்றாவது நாள் மதியம் இஷாந்த், ரெய்னா உள்ளிட்டோர் சைவ உணவுக்காக, மைதானத்தை விட்டு வெளியில் சென்று திரும்பினர்.

4வது நாள் காலையில் மோசமான ஆடுகளத்தில் பயிற்சி செய்த ஷிகர் தவான், கோஹ்லி காயமடைந்தனர். இதனால் ஏற்பட்ட ‘டிரசிங் ரூம்’ குழப்பத்தில், பேட்டிங் ஆர்டர் மட மடவென சரிய, இந்திய அணி எளிதாக வீழ்ந்தது. 

தற்போது மற்றொரு பிரச்னை கிளம்பியுள்ளது.

இந்திய அணி குறித்து ‘ஹெரால்டு சன்’ என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தி:
நான்காவது நாள் காலையில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் ‘டாப் ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் போவதும் வருவதுமாக இருந்தனர். 

அப்போது, பின் வரிசை வீரர்கள் சிலர் மைதானத்திலேயே இல்லையாம். இந்திய அணியின் முன்னணி பவுலர் இஷாந்த், வருண் ஆரோன் உள்ளிட்டோர், தாமதமாகத் தான் இந்திய அணியுடன் இணைந்தனர்.

இருப்பினும், இதை மறுத்த இந்திய அணி நிர்வாகம்,‘ விளையாடும் லெவனில் இல்லாத பவுலர்கள் தான், நீச்சல் பயிற்சியை முடித்துவிட்டு, தாமதமாக வந்தனர்,’ என, தெரிவித்துள்ளது.

உண்மையில் யார் யார் வெளியில் சென்றது, எங்கு சென்றனர் என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. 

0 comments:

Post a Comment