ஐ.பி.எல்., இந்திய வீரர்களுக்கு கல்தா

யுவராஜ் சிங் (பெங்களூரு), புஜாரா (பஞ்சாப்), தினேஷ் கார்த்தி (டில்லி), முரளி விஜய் (டில்லி) உள்ளிட்ட இந்திய வீரர்கள், ஐ.பி.எல்., அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 

இதனால் அடுத்தாண்டு நடக்கவுள்ள ஏலத்தின் மூலம் தேர்வாகி, மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.      
      
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டுக்கான 8வது ஐ.பி.எல்., தொடர் வரும் ஏப்., 8ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை நடக்கவுள்ளது. 

இதற்கு முன், ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்தது. வேறு அணிகளில் இருந்து வீரர்களை வாங்கிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாளாக கடந்த டிச., 12ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.        
    
இதன்படி, கடந்த சீசனில் அதிகபட்சமாக ரூ. 14 கோடிக்கு ஏலம் போன யுவராஜ் சிங்கை, பெங்களூரு அணி கழற்றிவிட்டது. இதனால் இவர், ஏலத்தில் பங்கேற்று மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் வாய்ப்பு பெறலாம். 

கடந்த சீசனில் ராஜஸ்தானுக்காக விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் இக்பால் அப்துல்லாவை பெங்களூரு அணி வாங்கியது. விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலை விடுவித்த பெங்களூரு அணி, கோல்கட்டா அணிக்காக விக்கெட் கீ்ப்பராக செயல்பட்ட மன்விந்தர் பிஸ்லாவை வாங்கியது.           

பார்த்திவ் படேலை மும்பை அணி வாங்கியது. மும்பை அணியில் இருந்து மைக்கேல் ஹசி, பிரவீண் குமார், ஜாகிர் கான் கழற்றிவிடப்பட்டனர். 

அதேவேளையில் ராஜஸ்தானிடம் இருந்து உன்முக்த் சந்த், கோல்கட்டாவிடம் இருந்து வினய் குமாரை மும்பை அணி வாங்கியது. ஹர்பஜன் சிங்கை மும்பை அணி தக்கவைத்துக் கொண்டது.      

பஞ்சாப் அணிக்காக விளையாடிய புஜாரா, பாலாஜி, முரளி கார்த்திக் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டனர். அதேவேளையின் சேவக்கை தக்கவைத்துக் கொண்டது.      

டில்லி அணியில் இடம் பெற்றிருந்த கெவின் பீட்டர்சன், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், லட்சுமி ரத்தன் சுக்லா விடுவிக்கப்பட்டனர். கேதர் ஜாதவ், மனோஜ் திவாரியை தக்கவைத்துக் கொண்டது. 

0 comments:

Post a Comment