"பிளே ஆப்' சுற்று எப்படி?

ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் லீக் சுற்றுகள் முடியவுள்ள நிலையில், "பிளே ஆப்' சுற்று போட்டிகள் விரைவில் துவங்குகின்றன.

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் முடிகின்றன. வரும் 24ம் தேதி முதல், "பிளே ஆப்' எனப்படும் அடுத்த சுற்று போட்டிகள் நடக்கின்றன. தற்போதைய நிலையில் சென்னை, பெங்களூரு அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன.

கோல்கட்டா, பஞ்சாப், மும்பை அணிகள் இடையே, அடுத்த இரு இடங்களுக்கு பலத்த போட்டி காணப்படுகிறது.

மற்றபடி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் என ஐந்து அணிகள், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.


"பிளே ஆப்' எப்படி?

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் இந்த சுற்றில் பங்கேற்கும். இதன் விவரம்:

* போட்டி 1: முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும். தவிர, சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

* போட்டி 2: இதில் மூன்று, நான்காவது இடம் பிடித்த அணிகள் மோதும். இந்த போட்டியில் தோல்வியடையும் அணி, தொடரில் இருந்து வெளியேற நேரிடும். சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பும் கிடைக்காது.

* போட்டி 3: இதில் போட்டி 1ல் தோல்வி, போட்டி 2ல் வென்ற அணிகள் மோதும். இதில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறும். இருப்பினும், இந்த இரு அணிகளுக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்கலாம்.

* போட்டி 4: நான்காவது ஐ.பி.எல்., தொடரின் பைனல். இதில், போட்டி 1 மற்றும் 3ல் வென்ற அணிகள் மோதும்.

0 comments:

Post a Comment