வங்கதேசத்துடன் இந்தியா இன்று மோதல்

கவுன்டன்:மலேசியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு அணிகள் விளையாடுகின்றன.அதில் இன்று நடக்கும் 7வது இடத்திற்கான போட்டியில் இந்தியா,வங்கதேச அணிகள் மோதுகின்றன. "பி"பிரிவில் இந்தியா.பாகிஸ்தான்,சீனா உள்ளிட்ட மூன்று அணிகள் லீக் சுற்றில் மோதின.

நடப்புச் சாம்பியனான இந்தியா, முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. அடுத்த ஆட்டத்தில் சீனாவுடன் டிரா (2-2) செய்தது. இதையடுத்து அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்தியா, 6 மற்றும் 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் வங்கதேசத்துடன் விளையாடுகிறது.

இதில் வெற்றி பெரும் அணி 5வது மற்றும் 6வது இடத்திற்கான போட்டியில் ஜப்பான் அணியை சந்திக்கும்.

இது குறித்து இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில் "ஆசிய ஹாக்கி தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.கடந்த எட்டு மாதங்களில் நான் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாமல் போனது இதுவே முதல் முறையாகும்.இன்றைய போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்ய விரும்புகிறேன்.இப்போட்டியில் இதுவரை விளையாடாத ஹரிபிரசாத், வி.எஸ்.வினயா, அஜிதேஷ் ராய் ஆகியோருக்கு வங்கதேசத்துடனான ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளேன்.முன்பு கூறியது போல அந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்," என்றார்.


0 comments:

Post a Comment