விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை:ஸ்ரீசாந்த்


ஜோகனஸ்பர்க்: "என் மீது விழும் விமர்சனங்களை நான் எப்போதும் கண்டுகொள்வதில்லை,"என்றார் ஸ்ரீசாந்த்.இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.காயம் மற்றும் மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.காயத்திலிருந்து தெரிய இவர்,தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஐ.பி.எல்.,தொடரில் பஞ்சாப் அணி சார்பில் விளையாடி வருகிறார்.

இதுவரை நான்கு போட்டிகளில் பந்து வீசிய இவர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.கடந்த 7 ம் தேதி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில்,பஞ்சாப் அணி விளையாடியது.இப்போட்டியில் ஸ்ரீசாந்தின் பந்து வீச்சை குறிவைத்து தாக்கினார் சென்னை வீரர் ஹைடன்.பின் ஸ்ரீசாந்தின் பந்து வீச்சில் அவுட்டானார்.உடனடியாக ஹைடனை பார்த்து ஆக்ரோஷமாக ஏதோ பேசினார் ஸ்ரீசாந்த்.

இப்போட்டிக்கு பின் பேட்டி அளித்த ஹைடன்,"ஸ்ரீசாந்த் மிகவும் ஆக்ரோஷமான வீரர்.நெருக்கடியான நேரத்தில் தனது அமைதியை இழந்து விடக் கூடியவர்,என விமர்சித்தார்.இதற்கு பதிலளித்த ஸ்ரீசாந்த் கூறியது;என் மீது ஹைடன் கூறிய விமர்சனங்களுக்கு என்ன பதில் கூறுகிறாய் என எனது நண்பர்கள் என்னிடம் கேட்டனர்.அதற்கு நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை எனக் கூறி விட்டேன். ஹைடன் மிகச் சிறந்த வீரர்.உலகின் தலை சிறந்த வீரர்களுள் அவரும் ஒருவர்.என் மீது எழும் விமர்சனங்களை குறித்து நான் கவலைப்படுவது இல்லை.கடவுளின் அருளால் நான் விளையாடி வருகிறேன்.அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட ஹைடனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்போது எனது வாயால் அல்ல,பந்து வீச்சின் மூலம் பேசுவேன்.ஹைடனுக்கு பதிலளிக்க இதுவே சிறந்த வழி.என்னை பற்றி தவறான செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் வெளிவருகிறது.எனது அணியின் கேப்டன் யுவராஜ் சிங்குடன் மோதல் என்ற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.எனது நண்பர்கள் இது பற்றி என்னிடம் கேட்டார்கள்.இது எப்போது நடந்தது என்பதே எனக்கு தெரியவில்லை.கடந்த ஏழு மாதங்களாக எல்லாவித பிரச்னைகளிலிருந்தும் விலகி இருக்கிறேன்.நான் மீடியாவை கேட்டுக் கொள்வது என்னவென்றால்,என்னை விட்டு விடுங்கள் என்பதே.இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

0 comments:

Post a Comment