முதல் நாளில் 3 புதிய சாதனை

போல்வால்ட் போட்டியில் புதிய தேசிய சாதனையுடன் 6-வது தேசிய யூத் தட கள சாம்பியன்ஷிப் மதுரையில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

  அதைத் தொடர்ந்து மகளிர் 3,000 மீட்டர், ஆடவர் 5,000 மீட்டர் போட்டிகளில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.

  ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் இறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேச வீரர் பர்மீந்தர் குமார் படேல் 4.30 மீ. உயரம் தாண்டி, 2007-ல் குஜராத் வீரர் விரேந்தர் சிங் படைத்த சாதனையை தகர்த்தார்.

  இவரும் ஹரியாணா வீரர் ஜிதேந்தரும் தலா 4.30 மீ. தாண்டினாலும் முதலாவதாக 4-வது வாய்ப்பில் பர்மீந்தர் குமார் வென்றார். இதையடுத்து வெள்ளியுடன் ஜிதேந்தர் திருப்தியடைய வேண்டியதாயிற்று.

  மகளிர் 3 ஆயிரம் மீ. ஓட்டத்தில் மகாராஷ்டிரத்தின் மோனிகா ஆத்ரே 10 நிமிடம் 9.17 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்தார். ஆடவருக்கான 5 ஆயிரம் மீ. ஓட்டத்தில் உ.பி. வீரர் இந்தர்ஜித் 14 நிமிடம் 68.30 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்தார்.

  மகளிருக்கான நீளம் தாண்டுதலில் ஹரியாணாவின் கெüசல்யா தேவி 5.72 மீ. தாண்டி முந்தைய சாதனையை சமன் செய்து தங்கம் வென்றார். தமிழகத்தின் பி.சுகன்யா 5.14 மீ. தாண்டி வெள்ளி பெற்றார்.
அதிவேக வீரர்: போட்டியின் அதிவேக வீரராக பஞ்சாபைச் சேர்ந்த பகவான் சிங் தேர்வு பெற்றார். இவர் 100 மீட்டர் தூரத்தை 11.08 விநாடிகளில் கடந்தார். மகளிர் பிரிவில் ஒரிசாவின் ரஞ்சிதா மஹந்தா 12.38 விநாடிகளில் இலக்கை எட்டி அதிவேக வீராங்கனையாகத் தேர்வு பெற்றார்.

0 comments:

Post a Comment