பொலிவிழக்கும் சிறப்பு விளையாட்டு விடுதி!

சென்னையில் இயங்கி வரும் சிறப்பு விளையாட்டு விடுதியின் (சிறப்பு பயிற்சி மையம்) சமீபகால போக்கு, அதன் இலக்கிலிருந்து விலகுவதாகத் தெரிகிறது.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் பள்ளிகளும், விளையாட்டு விடுதிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை விளையாட்டில் ஈடுபடுத்தி, செம்மைப்படுத்துவதற்காக மாவட்ட விளையாட்டு மன்றத்தின் கட்டுப்பாட்டில் இந்த விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

மாணவ, மாணவியர் "பிளஸ்-2' படிப்பை முடித்ததும், சர்வதேச புகழையும் அடைய வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம்தான் சிறப்பு விளையாட்டு விடுதி (நல்ர்ழ்ற்ள் ஏர்ள்ற்ங்ப் ர்ச் உஷ்ஸ்ரீங்ப்ப்ங்ய்ஸ்ரீஹ்). தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த விடுதி உள்ளது.

வாலிபால், கூடைப்பந்து, நீச்சல், தட களம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளில் சுமார் 60 வீரர்கள், என்.ஐ.எஸ். தகுதிபெற்ற பயிற்சியாளர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றனர். ஆதலால் இந்த சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கு கடும் போட்டி நிலவும். ராணுவத்துக்கு ஆள் எடுப்பது போன்று ஒரு காலத்தில் தேர்வுப் போட்டிக்கு கூட்டம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேர்வுப் போட்டிக்கு வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு வாலிபால் விளையாட்டுக்கும் வலுவான வீரர்கள் காணப்படவில்லை.

சோழிங்கநல்லூரில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அகாதெமி போன்ற தனியார் பயிற்சி மையங்களின் வருகை அதற்கு காரணமாகக் கூறப்பட்டாலும், அவர்கள் செய்து கொடுக்கும் வசதிகளை ஏன் அரசால் செய்ய முடியாது என்ற நியாயமான கேள்வியும் எழுகிறது.

சிறப்பு விளையாட்டு விடுதியை எதிர்த்து விளையாடுவது என்றால் தொழில்முறை வீரர்களைக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ரயில்வே போன்றவைகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். அந்த அளவுக்கு இளம் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்துவர். அதனால் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் புகழைப் பெற்றது. ஆனால் சமீபகாலமாக அந்த சிறப்பை தேடவேண்டியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டபோது ஒதுக்கப்பட்ட செலவினமே ஏறக்குறைய தற்போதும் இருந்துவருகிறது. அதைக் கவனிக்கும் அதிகாரிகள் இத் திட்டத்தை மண் தோண்டி புதைக்கப் பார்க்கிறார்களா அல்லது அரசு அவர்களின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பதில்லையா எனத் தெரியவில்லை. ஆனால் நாள்தோறும் வளர்ந்துவரும் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப திட்டங்களை செயல்படுத்துவது அவசியம்.

பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்ற சிறப்பு விளையாட்டு விடுதிக்கென தனியாகக் கட்டடம் இல்லாதது மற்றொரு பெரிய குறை. நேரு ஸ்டேடியத்தின் சுற்றுப் பிரகாரத்தின் ஓரம் சாரத்தில் வீரர்களுக்கான தங்கும் அறைகளும், உணவு விடுதியும் காற்றோட்டமில்லாமல் உள்ளன. நாளுக்கு நாள் ஆற்றலை அதிகப்படுத்தும்விதமான உணவுமுறை கிடையாது எனவும் தெரியவருகிறது.

தனியாக அதிகாரி இல்லை: நேரு ஸ்டேடியத்தில் இயங்கிவரும் சிறப்பு விளையாட்டு விடுதிக்கு தனியாக அதிகாரி கிடையாது. நேரு ஸ்டேடிய அதிகாரியே அதையும் கவனித்து வருகிறார். இது மிகப்பெரிய குறை.

இதற்காக தனியாக ஓர் அதிகாரி தேவையில்லை எனக் கருதும் எஸ்.டி.ஏ.டி., சத்துவாச்சாரியில் (வேலூர்) விளையாட்டு விடுதி அல்லாத பளுதூக்குதல் பயிற்சி மையத்துக்கென ஓர் அதிகாரியை நியமித்திருப்பது ஏன் எனத் தெரியவில்லை.

மாநில அளவில் மட்டுமல்லாது, தேசிய அளவிலும் அந்த மையத்தால் புகழ் கிடைக்கும் அத் திட்டத்துக்கு அரசு ஆண்டொன்றுக்கு செலவிடும் தொகை சுமார் ரூ. 1.5 லட்சம்தான். ஆனால் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியின் சம்பளமோ ஆண்டொன்றுக்கு ரூ. 3 லட்சத்துக்கும் மேல். இதுபோன்ற காரணங்களாலேயே சிறப்பு விளையாட்டு விடுதி திட்டங்கள் அதன் பாதையிலிருந்து விலகிச் செல்கின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது.

செய்னாவின் ஒலிம்பிக் கனவு

சர்வதேச பாட்மின்டன் அரங்கில், இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்து கொண்டிருக்கிறார் செய்னா நேவல். தொடர்ந்து
அபாரமாக ஆடி வரும் இவர், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதை குறிக்கொளாக கொண்டுள்ளார்.தற்போது 19 வயதான செய்னா, தனது 8வது வயது முதல் பாட்மின்டன் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக் ஒற்றையர்பிரிவில் காலிறுதி வரை முன்னேறினார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். சமீபத்தில் நடந்த சூப்பர் சீரிஸ் பாட்மின்டன்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து இப்பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத் தார். சர்வதேச பாட் மின்டன் ரேங்கிங்கில் 6வது இடத்திற்கு முன்னேறினார்.

தனது எதிர்கால திட்டங்கள் குறித்த செய்னா அளித்த பேட்டி:இந்தியா சார்பில் நிறைய போட்டிகளில் பங்கேற்று, பல வெற்றிகளை குவித்துள்ளேன். இருப்பினும் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் தொடரில் கிடைத்த வெற்றி முற்றிலும் மாறுபட்டது. இதன்மூலம் ரசிகர்கள் அதிக அளவு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சானியா ஒப்பீடு

கிரிக்கெட் இந்தியாவில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இது ஜாதி, மதம் போல வேரூண்றி நிலைத்து நிற்கிறது. இவ்வாரு கூறுவதால், நான் கிரிக்கெட்டுக்குஎதிரி அல்ல. இருப்பினும், ஒவ்வொரு விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள். இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு இணையாக என்னைப்பற்றி பேசுவது, மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஊக்கமளிக்கிறது.

பாட்மின்டன் வளர்ச்சி

டென்னிஸ் போட்டிகளுக்கு இணையாக பாட்மின்டன் இன்னும் வளர்ச்சி பெறவில்லை. ரசிகர்கள் ஆதரவு டென்னிஸ் போட்டிகளுக்கு அதிகம். இதற்கு பணம் முக்கிய காரணம். டென்னிஸ் தொடர்களை நடத்த அதிக ஸ்பான்சர்கள் உள்ளனர். ஆனால், பாட்மின்டனுக்கு யோனக்ஸ் என்றநிறுவனம் மட்டுமே உள்ளது.

பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்

பயிற்சியாளர் கோபிசந்த் எனது வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கிறார். போட்டிக்கு முன் போதுமான பயிற்சி அளிக்கிறார். இதுதவிர, எனது பெற்றோர்கள் முழு ஆதரவு அளிக்கின்றனர். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது மற்றும் சர்வதேச பாட்மின்டன் ரேங்கிங்கில் முதலிடம் பிடிப்பது தான் எனது எதிர்கால கனவு. இவ்வாறு செய்னா நேவல் கூறினார்

தீபிகா அதிர்ச்சி தோல்வி

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் உள்ள ஸ்குவாஷ் ராக்கெட் சங்க அரங்கில் நடக்கிறது. இந்தப் போட்டியில், நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடந்தது. இதில் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை தீபிகா பலிக்கல், அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை தீபிகா பலிக்கல், எகிப்தைச் சேர்ந்த நான்காம் நிலை வீராங்கனை நூர் எல்தயப்பிடம் 6-11, 11-8, 8-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்த வெற்றியின் மூலம் நூர் எல் தயப், சக நாட்டு வீராங்கனையான நூர் எல் செர்பினியை பைனலில் சந்திக்க உள்ளார்.

அரையிறுதி ஆட்டத்தின் வெற்றி குறித்து நூர் எல் தயப் கூறுகையில், ""இது ஒரு நல்ல வெற்றி. எனது பயிற்சியாளர் கூறியது போல் விளையாடிய காரணத்தால், வெற்றி பெற்றேன். தீபிகாவுடன் விளையாடியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பைனலிலும் வெற்றி பெற ஆவலாக இருக்கிறேன்,'' என்றார்.

இந்தப் போட்டியின் பெண்களுக்கான மற்றொரு அரையிறுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த மரியா தூர் பாகே, எகிப்தைச் சேர்ந்த நூர் எல் செர்பினியிடம் 8-11, 6-11, 6-11 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்த உள்ளனர்.

ஆண்களுக்கான அரையிறுதியில், எகிப்தைச் சேர்ந்த முதல்நிலை வீரர் முகமத் எல் சோர்பகி, சகநாட்டு வீரரான ஆண்ட்ரூ வகி சவ்கிரியை 11-7, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பைனலுக்கு தகுதிபெற்றார். ஆண்களுக்கான மற்றொரு அரையிறுதியில், மலேசியாவைச் சேர்ந்த இரண்டாம் நிலை வீரர் இவான் யன், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆவுரங்கசீப் மெக்மூத்தைச் 11-6, 11-9,11-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றார்

இந்தியா அபாரம்

இரண்டாவது ஹாக்கி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலை அடைந்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஹாக்கி அணி வீரர்கள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றனர். முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி பர்மிங்ஹாமில் நேற்று நடந்தது.ஆட்டத்தின் துவக்கம் முதல் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணிக்கு ஆஷ்லே ஜாக்சன் 22வது நிமிடத்தில் முதல் கோலடித்து முன்னிலை தந்தார். இங்கிலாந்து வீரர் ஜான்டி கிளார்க் 26வது நிமிடத்தில் கோலடித்து 2-0 என வலுவான முன்னிலை தந்தார்.

தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு 35வது நிமிடத்தில் அர்ஜுன் ஹலாப்பா 35வது நிமிடத்தில் கோலடித்து நம்பிக்கை தந்தார். முதல் பாதியில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு, தனன்ஜெய் மகாதிக் (41வது நிமிடம்), ராஜ்பால் சிங் (43வது நிமிடம்), குருவிந்தர் சிங் (65வது நிமிடம்) தலா ஒரு கோலடித்து 4-2 என முன்னிலை தந்தனர். இறுதிவரை போராடிய இங்கிலாந்து வீரர் ஆஷ்லே ஜாக்சன் 69வது நிமிடத்தில் கோலடித்து ஆறுதல் தந்தார். இருப்பினும், ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

சாதிப்பாரா ஷரபோவா

டென்னிஸ் உலகில் காயம் காரணமாக அவதிப்படும் வீராங்கனைகளில் முக்கியமானவர் ரஷ்யாவின் மரியாஷரபோவா. முன்னாள் "நம்பர்-1' வீராங்கனையான இவர் 3 முறை கிராண்ட்ஸ் லாம் பட்டம் வென்றுள் ளார். சமீபகாலமாக காயம் காரணமாக நிறைய தொடர்களில் பங்கேற்காதது, அடுத்தடுத்து விரட்டிய தோல்விகளால் ரேங்கிங்கிலும் பின்தங்கினார்.

சமீபத்தில் நடந்த விம்பிள்டன் தொடரின் 2வது சுற்றிலேயே தோல் வியடைந்து வெளியேறினார். இதனால் ரேங்கிங்கில் 62 வது இடத்துக்குபின்தள்ளப்பட்டார்.தற்போது வலது தோள் பட்டை காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள இவர், மீண்டும் சாதிக்கதயாராகிறார். வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இழந்த பெருமையை மீட்ககாத்திருக்கிறார்.

இது குறித்துஷரபோவா கூறியது:எனது 14 வயதில் துவங்கிய டென்னிஸ் பயணம் 22 வயது வரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதில் மீண்டு வருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தற்போது நிறைய பெண்கள் டென்னிசிற்கு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அனுபவம் போதாது. என்னுடையதொழிலான டென்னிஸ் குறித்து நிறைய கற்றுள்ளேன். எப்படியும் இந்த ஆண்டு சோகமாக செல்லாது. சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

மீண்டும் டென்னிஸ்

காயங்கள் ஏற்படுவது எல்லோருக்கும் வழக்கமானது தான். இதுவிளையாட்டில் ஒரு பகுதிதான். இந்த காயத்திற்கு ஆப்பரேஷன் செய்த பின், நூறு சதம் குணமடைந்துள்ளேன். இப்போது டென்னிஸ் போட்டிகளில் விளையாட தயாராக உள்ளேன்.கடந்த காலத்தில் நடந்தவைகளை மறந்து விட்டு, சிறந்த முறையில் மீண்டு வருவேன். ரேங்கிங்கில் முன்னுக்கு வருவேன். யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்பு, லாஸ் ஏஞ்சல்சில் நடக்க இருக்கும் டென்னிஸ் தொடரில் கலந்து கொள்ள உள்ளேன். வரும் காலங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன். இவ்வாறுஷரபோவா கூறினார்