பத்திரிகையாளர் மீது கோஹ்லி பாய்ச்சல்

பத்திரிகையாளர் ஒருவரை கடுமையாக திட்டிய கோஹ்லி புது சர்ச்சை கிளப்பினார்.

பெர்த்தில் நேற்று பயிற்சி முடித்து ‘டிரஸ்சிங் ரூமிற்கு’ திரும்பிய கோஹ்லி, இந்தியாவை சேர்ந்த ஒரு ஆங்கில நாளிதழின் பத்திரிகையாளரை தகாத வார்த்தைகளால் திட்டினார். 

இவர், தொடர்ந்து வசைபாட சக வீரர்களும் அந்த பத்திரிகையாளரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறிது நேரத்திற்கு பின் கோபத்திற்கான காரணம் தெரிய வந்தது. கோஹ்லி மற்றும் அவரது தோழியும் நடிகையுமான அனுஷ்கா பற்றி சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. 

அதை அந்த பத்திரிகையாளர் தான் எழுதியதாக கோஹ்லி தவறாக நினைத்துள்ளார். இந்த செய்தியை தான் எழுதவில்லை என்று கூறியுள்ளார். 

உடனே தவறை உணர்ந்த கோஹ்லி, மற்றொரு பத்திரிகையாளரை அழைத்து தனது வருத்தத்தை அவரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். 

பின் அணி இயக்குனர் ரவி சாஸ்திரி, கோஹ்லியை தனிப்பட்ட முறையில் அழைத்து பதட்டப்படாமல் இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக கருதப்படும் சூழலில், இது போன்று பொது இடத்தில் நடக்க கூடாது என ஆலோசனை கூறினாராம்.

0 comments:

Post a Comment