ரெய்னாவின் புது வியூகம் - பவுன்சரை சமாளிக்க பயிற்சி

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் சாதிக்க, இந்திய அணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஸ்டார்க், ஜான்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பவுலர்களின் ‘பவுன்சர்களை’ சமாளிக்க, டென்னிஸ் பந்துகளை எகிறச் செய்து ரெய்னா பயிற்சியில் ஈடுபட்டார்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், விஷேச திட்டத்துடன் இந்திய வீரர்கள் பயிற்சி செய்கின்றனர். 

பாகிஸ்தானின் 7.1 அடி உயரம் கொண்ட முகமது இர்பானை சமாளிக்க, இரண்டு சிறிய நாற்காலி ‘பார்முலாவை’ பயன்படுத்தி பயிற்சி செய்தனர்.


புதிய திட்டம்:

அடுத்து, சிட்னியில் 26ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க, ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா ஆயத்தமாகிறது.

இங்கு ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக இருக்குமா அல்லது சுழலுக்கு சாதகமாக தொடருமா என, இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களுக்கு ‘பவுன்சர்’ வீசிய ஸ்டார்க், ஜான்சன், ஹேசல்வுட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய அணி பயிற்சியாளர் பிளட்சர், 66, நேற்று புதிய திட்டத்தை கையாண்டார். 

பயிற்சியின் போது ரெய்னாவை மட்டும் தனியாக அழைத்துச் சென்றார். டென்னிஸ் ‘ராக்கெட்டை’ மூலம் ரெய்னாவை நோக்கி டென்னிஸ் பந்தை வேகமாக அடித்தார். இந்த பந்தின் எடை குறைவு என்பதால் தரையில் பட்டு நன்கு உயரமாக முகத்தை நோக்கி வந்தது. 

இதை எப்படி சமாளிப்பது என, பயிற்சியில் ஈடுபட்டார் ரெய்னா. உடலில் படும் படி வந்த பந்துகளை ‘ஹூக் ஷாட்’ அடித்து பழகினார். ஸ்டார்க் வீசுவதைப் போல வேகமாக வந்த பந்துகளை சமாளிக்க முடியாமல்  தடுமாறினார். இதையடுத்து, ரெய்னாவுக்கு உரியா ஆலோசனைகள் வழங்கினார் கேப்டன் தோனி.

இந்த பயிற்சி ரெய்னாவின் ‘ஷார்ட் பிட்ச்’ பலவீனத்தை சரியாக்க உதவும் என, நம்பப்படுகிறது.

0 comments:

Post a Comment