இந்தியா பங்கேற்கும் 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா 2 பயிற்சி ஆட்டங்கள் ஆடுகிறது. 

இதன்படி இந்தியா-லீசெஸ்டர்ஷைர் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று (பிற்பகல் 3.30 மணி முதல்) தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கும், டெஸ்டுக்கு தயாராவதற்கும் இந்த பயிற்சி ஆட்டம் உதவிகரமாக இருக்கும். 

கவுண்டி அணியான லீசெஸ்டர்ஷைரில் இங்கிலாந்து வீரர்களை தவிர்த்து சர்வான் (கேப்டன்), நியல் ஓ பிரையன், ஸ்டைரிஸ் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

0 comments:

Post a Comment