தென் ஆப்ரிக்கா பிரமாண்ட வெற்றி - 151 ரன்னுக்கு சுருண்டது வெ.இண்டீஸ்

உலக கோப்பை லீக் போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்க அணி பிரமாண்ட வெற்றி பெற்றது. டிவிலியர்ஸ் 52 பந்தில் சதம் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்னுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.


அசத்திய இருவர்:

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (12) அதிர்ச்சி கொடுக்க, முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 30 ரன்கள் மட்டும் எடுத்தது. பின், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆம்லா, டு பிளசி என, அடுத்தடுத்து அரைசதம் விளாசினர்.


டிவிலியர்ஸ் சதம்:

2வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த போது, போட்டியின் 30வது ஓவரை வீசிய கெய்ல், டுபிளசி (62), ஆம்லாவை (65) அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து இணைந்த ரோசாவ், டிவிலியர்ஸ் ஜோடி வேகமாக ரன்கள் சேர்த்தது. 4வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த போது, அரைசதம் அடித்த ரோசாவ் (61) அவுட்டானார்.

மறுமுனையில் 30 பந்தில் அரைசதம் எட்டிய டிவிலியர்ஸ், அடுத்த 22வது பந்தில் சதத்தை (52 பந்து) கடந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது.

ஹோல்டர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் 4 பவுண்டரி, 2 சிக்சர் என, 34 ரன்கள் எடுத்த டிவிலியர்ஸ், கடைசி ஓவரில் 30 ரன்கள் (4 சிக்சர், 1 பவுண்டரி) அடிக்க, 400 ரன்களை கடந்தது. கடைசி 10 ஓவரில் மட்டும் 150 ரன்கள் சேர்த்த தென் ஆப்ரிக்க அணி, 50 ஓவரில்  5 விக்கெட்டுக்கு 408 ரன்கள் குவித்தது. 66 பந்தில் 162 ரன்கள் எடுத்த டிவிலியர்ஸ், பெகர்டியன் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.


இமாலய இலக்கு:

எட்ட முடியாத இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, ரன்கள் எடுப்பதற்குப் பதில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது.

கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த கெய்ல், இம்முறை 3 ரன்னுடன் கிளம்பினார். சாமுவேல்ஸ் ‘டக்’ அவுட்டானார். ஸ்மித் (31), சிம்மன்ஸ் ‘டக்’, சமி (5) வரிசையாக இம்ரான் தாகிர் சுழலில் சிக்கினர். கார்டர் (10) நீடிக்கவில்லை.

தொடர்ந்து ரசலும் ‘டக்’ அவுட்டாக, 63 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. ராம்தின் (22) ஏமாற்ற, தனது முதல் அரைசதம் கடந்த திருப்தியில் ஹோல்டர் (56) திரும்பினார். பின் வந்த பென் (1) அபாட்டிடம் சிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி, 33.1 ஓவரில், 151 ரன்னுக்கு சுருண்டு, 257 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெய்லர் (15) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருது டிவிலியர்சிற்கு கிடைத்தது.


இது அதிகம்

உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது தென் ஆப்ரிக்கா (408/5). இதற்கு முன், 2
* சிட்னி மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது தான். இதற்கு முன் 2006ல் ஆஸ்திரேலிய அணி 368/5 ரன்கள் (எதிர்–இலங்கை) எடுத்தது.

* தவிர, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் மற்றும் 50 ஓவர் போட்டிகளில், முதன் முறையாக 400 ரன்களை தாண்டிய அணி என்ற பெருமை பெற்றது தென் ஆப்ரிக்கா. 


அதிவேக 50, 100, 150

ஒருநாள் கிரிக்கெட்டில் அதி வேக 50, 100, 150 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ்

* கடந்த ஜன., 18ல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 16 பந்தில் அரைசதம் கடந்தார். அடுத்த இடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா (17 பந்து) உள்ளார்.

* இதே போட்டியில் 31 பந்தில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் (36 பந்து) உள்ளார்.

* தற்போது, உலக கோப்பை அரங்கில் 64 பந்தில் 150 ரன்கள் எடுத்து, மற்றொரு சாதனை படைத்தார். 

தென் ஆப்ரிக்க அணிக்கு அபராதம்

இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசிய தென் ஆப்ரிக்க அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னில் நடந்த ‘பி’ பிரிவு உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. 

இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசியது.

ஐ.சி.சி., விதிமுறைப்படி போட்டியில் தாமதமாக பந்துவீசுவது குற்றமாகும். 

இதனையடுத்து ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ ஜெப் குரோவ், தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்சுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதித்தார். 

உலக கோப்பை பைனலுக்கு முன், மீண்டும் ஒரு முறை தென் ஆப்ரிக்க அணி தாமதமாக பந்துவீசும் பட்சத்தில், கேப்டன் டிவிலியர்சுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தவா­னுக்கு கேப்டன் தோனி பாராட்டு

தென் ஆப்­ரிக்­கா­வுக்கு எதி­ராக நன்கு திட்­ட­மிட்டு பேட் செய்தார் ஷிகர் தவான்,’’என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்தார். 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 

இதில் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய வீரர் தவான் சதம் (137) விளாசினார். இது அணியின் வெற்றிக்கு வித்திட்டது. 

இது குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ தென் ஆப்­ரிக்­கா­வுக்கு எதி­ராக நன்கு திட்­ட­மிட்டு பேட் செய்தார் ஷிகர் தவான். சதம் அடித்த பிறகு ரன் வேட்­டையை தொடர்ந்­தது தான் சிறப்­பம்சம்.

வீரர்களின் ‘பார்ம்’ குறித்து விமர்­சிக்­கின்­றனர். இதனை யாரும் அவ்­வ­ள­வு எளிதில் கண்­ட­றிய முடி­யாது. 15 முதல் 20 நிமிடங்களில் இழந்த ‘பார்மை’ மீட்­­கலாம். தவானை பொறுத்­த­வரை கடந்த போட்­டியில் போதிய நேரம் தாக்­குப்­பி­டித்து விளை­யா­டினார். இது, தென் ஆப்­ரிக்­கா­வுக்கு எதி­ராக சதம் அடிக்க உத­வி­யது.

ரெய்னா, ஜடேஜா அவுட்டான பின், ஷமி, அஷ்வின் இணைந்து 300 ரன்களை தாண்ட உதவியது பாராட்டுக்குரியது. ஒட்டுமொத்த பவுலிங் கூட்டணியும் திறமையுடன் செயல்பட்டது. எங்கள் அணியில், சிறப்பான ‘பீல்டர்கள்’ உள்ளனர். உலக கோப்பை தொடரின் முதலிரண்டு லீக் போட்டிகளிலும் வென்றது மகிழ்ச்சி.


ரசி­கர்­க­ளுக்கு நன்றி:

மெல்போர்ன் அரங்கில் திரண்ட சுமார் 87 ஆயிரம் ரசிகர்­களை பார்த்த போது மிகவும் பிர­மிப்­பாக இருந்­தது. இதில், 20 ஆயிரம் ரசி­கர்கள் தென் ஆப்ரிக்­கா­வுக்கு ஆத­ரவு அளித்­தனர் என்­றாலும் கூட, மீத­முள்ள 60 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட ரசி­கர்கள் இந்­த­ி­யா­வுக்கு உற்­சாகம் அளித்­தனர். இவர்­க­ளது ஆத­ர­வு, சிறப்­பாக செயல்­பட ஊக்­கம் தந்­தது. இவர்­க­­ளுக்கு எனது நன்­றி,’’ என்றார்.


நம்பிக்கை மீது ‘அடி’

தோல்வி குறித்து தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் கூறுகையில்,‘‘ இந்திய அணியிடம் 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது அதிர்ச்சியாக உள்ளது. இது மிகவும் வருத்தம் தருகிறது.  

எங்களின் நம்பிக்கையின் மீதும் பலத்த ‘அடி’ விழுந்­துள்­ள­து. போட்டி முடிந்தபின், ஆம்லாவிடம் பேசினேன். அப்போது, இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார். அதே நேரத்தில், எங்களின் ‘பேட்டிங்’ படுமோசமாக இருந்தது,’’ என்றார். 

உ­­லக கோப்பையில் சூதாட்டம்

உலக கோப்பை தொடரின் முடி­வுகள் கிரிக்கெட் சூதாட்­டக்­கா­ரர்­க­ளால் முன்­கூட்­டியே நிர்­ணயிக்­கப்­பட்­ட­தாக ‘வாட்ஸ் ஆப்’ சமூக வளைதளத்தில் செய்­தி வெளியாகி உள்­ளது.

ஆஸ்­தி­ரே­ல­ியா, நியூ­சி­லாந்தில் 11வது உலக கோப்பை தொடர் நடக்­கி­றது. இதில்,  சூதாட்­டக்­கா­ரர்கள் அதிகம் ‘விளையா­டு­வ­து’ போல சமூ­க­வ­ளை­த­ள­மா­ன ‘வாட்ஸ் ஆப்பில்’ செய்தி வெளியா­க­ி­யுள்­ள­து. 

இதுவரை நடந்த போட்­டி­களின் முடிவு இவர்கள் கணிப்­பின்­ப­டி சரியாக அமைந்­துள்­ளது. உதா­ர­ண­மாக, நியூ­சி­லாந்து அனைத்து போட்­டி­க­ளிலும் வென்றது. 

நாளை நடக்கும் போட்­டியில் இந்­திய அணி, தென் ஆப்­ரிக்­க­விடம் தோற்­குமாம். அடுத்து, ஜிம்­பாப்­வே­யிடமும் தோல்வி அடையும் என கூறப்­பட்­டுள்­ளது. 

காலி­று­தியில் இந்­தியா, நியூ­­சி­லாந்தை வெல்­லுமாம். அரையி­று­தியில் ஆஸ்­தி­ரே­ல­ி­யா­­விடம் தோற்று, கோப்­பையை தக்க வைக்­காது என தெரி­வ­ிக்­கப்­பட்­டுள்­ளது.

மார்ச் 29ல் நடக்கும் பைனலில் தென் ஆப்­ரிக்க அணி, ஆஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்­தி, முதல் முறை­யாக சாம்­பியன் பட்­டத்தை வெல்லும் என கணிக்­கப்­பட்­டுள்­ள­து. 

இது போன்ற செய்­தி­களின் உண்மைதன்மையை கண்­ட­றிந்து, ஐ.சி.சி., உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பதே ரசி­கர்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

இந்திய அணிக்கு சச்சின் எச்சரிக்கை

தென் ஆப்ரிக்க அணியினர் ‘பீல்டிங்கில்’ துடிப்பானவர்கள். பந்துவீச்சில் மிரட்ட ஸ்டைன் காத்திருப்பதால், இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்,’’என, சச்சின் தெரிவித்தார். 

உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியா, நியசிலாந்தில் நடக்கிறது. இதில் இந்திய அணி முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அடுத்த போட்டியில்(பிப்.,22), தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியது:

தென் ஆப்ரிக்க வீரர்கள் மிகவும் துடிப்பானவர்கள். பாகிஸ்தான் அணியை விட ‘பீல்டிங்கில்’ சிறப்பாக செயல்படுவார்கள். பந்தை அருகில் தட்டிவிட்டு, ஒரு ரன் எடுப்பது கடினம். துவக்க ஜோடி சிறப்பான அடித்தளம் அமைக்க வேண்டும். 

ரோகித் சர்மா அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். கேப்டன் தோனியின் ‘பார்ம்’ கவலை தருவதாக இல்லை. இந்திய அணி 320 ரன்களுக்கு அதிகமாக ரன்களை குவிப்பதை, இலக்காக கொள்ள  வேண்டும். 

ஏனெனில், கடந்த போட்டியில் பாகிஸ்தான்  சிறப்பாக விளையாடி இருந்தால், 300 ரன்களை எட்டி இருக்கும். 

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன் நம்ப முடியாத திறமை வாய்ந்தவர். இவரின் பந்துவீச்சை சரியாக கணித்து விளையாடுவது கடினம். இவ்வாறு சச்சின் கூறினார்.