தவா­னுக்கு கேப்டன் தோனி பாராட்டு

தென் ஆப்­ரிக்­கா­வுக்கு எதி­ராக நன்கு திட்­ட­மிட்டு பேட் செய்தார் ஷிகர் தவான்,’’என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்தார். 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 

இதில் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய வீரர் தவான் சதம் (137) விளாசினார். இது அணியின் வெற்றிக்கு வித்திட்டது. 

இது குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ தென் ஆப்­ரிக்­கா­வுக்கு எதி­ராக நன்கு திட்­ட­மிட்டு பேட் செய்தார் ஷிகர் தவான். சதம் அடித்த பிறகு ரன் வேட்­டையை தொடர்ந்­தது தான் சிறப்­பம்சம்.

வீரர்களின் ‘பார்ம்’ குறித்து விமர்­சிக்­கின்­றனர். இதனை யாரும் அவ்­வ­ள­வு எளிதில் கண்­ட­றிய முடி­யாது. 15 முதல் 20 நிமிடங்களில் இழந்த ‘பார்மை’ மீட்­­கலாம். தவானை பொறுத்­த­வரை கடந்த போட்­டியில் போதிய நேரம் தாக்­குப்­பி­டித்து விளை­யா­டினார். இது, தென் ஆப்­ரிக்­கா­வுக்கு எதி­ராக சதம் அடிக்க உத­வி­யது.

ரெய்னா, ஜடேஜா அவுட்டான பின், ஷமி, அஷ்வின் இணைந்து 300 ரன்களை தாண்ட உதவியது பாராட்டுக்குரியது. ஒட்டுமொத்த பவுலிங் கூட்டணியும் திறமையுடன் செயல்பட்டது. எங்கள் அணியில், சிறப்பான ‘பீல்டர்கள்’ உள்ளனர். உலக கோப்பை தொடரின் முதலிரண்டு லீக் போட்டிகளிலும் வென்றது மகிழ்ச்சி.


ரசி­கர்­க­ளுக்கு நன்றி:

மெல்போர்ன் அரங்கில் திரண்ட சுமார் 87 ஆயிரம் ரசிகர்­களை பார்த்த போது மிகவும் பிர­மிப்­பாக இருந்­தது. இதில், 20 ஆயிரம் ரசி­கர்கள் தென் ஆப்ரிக்­கா­வுக்கு ஆத­ரவு அளித்­தனர் என்­றாலும் கூட, மீத­முள்ள 60 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட ரசி­கர்கள் இந்­த­ி­யா­வுக்கு உற்­சாகம் அளித்­தனர். இவர்­க­ளது ஆத­ர­வு, சிறப்­பாக செயல்­பட ஊக்­கம் தந்­தது. இவர்­க­­ளுக்கு எனது நன்­றி,’’ என்றார்.


நம்பிக்கை மீது ‘அடி’

தோல்வி குறித்து தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் கூறுகையில்,‘‘ இந்திய அணியிடம் 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது அதிர்ச்சியாக உள்ளது. இது மிகவும் வருத்தம் தருகிறது.  

எங்களின் நம்பிக்கையின் மீதும் பலத்த ‘அடி’ விழுந்­துள்­ள­து. போட்டி முடிந்தபின், ஆம்லாவிடம் பேசினேன். அப்போது, இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார். அதே நேரத்தில், எங்களின் ‘பேட்டிங்’ படுமோசமாக இருந்தது,’’ என்றார். 

0 comments:

Post a Comment