இந்திய அணிக்கு சச்சின் எச்சரிக்கை

தென் ஆப்ரிக்க அணியினர் ‘பீல்டிங்கில்’ துடிப்பானவர்கள். பந்துவீச்சில் மிரட்ட ஸ்டைன் காத்திருப்பதால், இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்,’’என, சச்சின் தெரிவித்தார். 

உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியா, நியசிலாந்தில் நடக்கிறது. இதில் இந்திய அணி முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அடுத்த போட்டியில்(பிப்.,22), தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியது:

தென் ஆப்ரிக்க வீரர்கள் மிகவும் துடிப்பானவர்கள். பாகிஸ்தான் அணியை விட ‘பீல்டிங்கில்’ சிறப்பாக செயல்படுவார்கள். பந்தை அருகில் தட்டிவிட்டு, ஒரு ரன் எடுப்பது கடினம். துவக்க ஜோடி சிறப்பான அடித்தளம் அமைக்க வேண்டும். 

ரோகித் சர்மா அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். கேப்டன் தோனியின் ‘பார்ம்’ கவலை தருவதாக இல்லை. இந்திய அணி 320 ரன்களுக்கு அதிகமாக ரன்களை குவிப்பதை, இலக்காக கொள்ள  வேண்டும். 

ஏனெனில், கடந்த போட்டியில் பாகிஸ்தான்  சிறப்பாக விளையாடி இருந்தால், 300 ரன்களை எட்டி இருக்கும். 

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன் நம்ப முடியாத திறமை வாய்ந்தவர். இவரின் பந்துவீச்சை சரியாக கணித்து விளையாடுவது கடினம். இவ்வாறு சச்சின் கூறினார். 

0 comments:

Post a Comment