உலக கோப்பை தொடரின் முடிவுகள் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களால் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதாக ‘வாட்ஸ் ஆப்’ சமூக வளைதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 11வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில், சூதாட்டக்காரர்கள் அதிகம் ‘விளையாடுவது’ போல சமூகவளைதளமான ‘வாட்ஸ் ஆப்பில்’ செய்தி வெளியாகியுள்ளது.
இதுவரை நடந்த போட்டிகளின் முடிவு இவர்கள் கணிப்பின்படி சரியாக அமைந்துள்ளது. உதாரணமாக, நியூசிலாந்து அனைத்து போட்டிகளிலும் வென்றது.
நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்கவிடம் தோற்குமாம். அடுத்து, ஜிம்பாப்வேயிடமும் தோல்வி அடையும் என கூறப்பட்டுள்ளது.
காலிறுதியில் இந்தியா, நியூசிலாந்தை வெல்லுமாம். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று, கோப்பையை தக்க வைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 29ல் நடக்கும் பைனலில் தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற செய்திகளின் உண்மைதன்மையை கண்டறிந்து, ஐ.சி.சி., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0 comments:
Post a Comment