புதிய அவதாரம் எடுக்கிறார் கங்குலி


உலகக் கிண்ண "T20' போட்டியில் கங்குலி நேர்முக வர்ணனையாளராக கடமையாற்றவுள்ளார்.

இந்திய கிரிக்கெட அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2 ஆவது இனிங்ஸை விரைவில் தொடங்கவுள்ளார்.

இங்கிலாந்தில் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது ஈ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் வர்ணனையாளராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அரையிறுதி ஆட்டத்திலிருந்து அவர் இந்த பணியைத் தொடருவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய பணி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கங்குலியிடம் " கமெண்ட்ரி பொக்சில் ' உட்கார்ந்து கொண்டு உங்களது சக வீரர்களை விமர்சிப்பது உங்களுக்கு கஷ்டமாக இருக்காதா? என்று கேட்டபோது இப்போதுதான் கமெண்ட்ரி பணியைத் தொடங்குகிறேன்.அதுவும் அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் மட்டுமே இப்பணியை செய்ய இருக்கிறேன். எனது முன்னாள் சக வீரர்களுடன் நான் நட்புடன் கைகுலுக்குவேன் என்று நம்புகிறேன். அவர்களிடம் பேட்டி எடுக்கவும் ஆர்வமாக உள்ளதாக நழுவலாகப் பதிலளித்தார்.


கோப்பையின் எடை 7.5 கி.கி.,



இங்கிலாந்தில் இன்று துவங்கும் இரண்டாவது "டுவென்டி-20' உலககோப்பை தொடரில், சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி 7.5 கி.கி., எடையுள்ள கோப்பையை வெல்ல உள்ளது. இக்கோப்பை 51 செ.மீ., நீளம் உடையது. இதன் மேற்பகுதி 19 செ.மீ., அகலமும், அடிப்பகுதி 14 செ.மீ., அகலமும் கொண்டது. வெள்ளி மற்றும் பிளாட்டினத்தால் உருவான இக்கோப்பையை, ஆஸ்திரேலியா தயார் செய்துள்ளது. கடந்த 2007 ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடந்த முதல் உலககோப்பை தொடரின் கோப்பை 12.5 கி.கி., எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. இக்கோப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
இளம் மற்றும் சீனியர் வீரர்கள்

இந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் மொத்த அணிகளின் சார்பில் சுமார் 180 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமெர் இளம் வீரராகவும், இலங்கையின் ஜெயசூர்யா மூத்த வீரராகவும் இருக்கிறார்.

பாகிஸ்தான் வீரர் முகமது ஆமெர் இன்னும் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் இவர் களமிறங்கும் போது ஆமெர் 17 வயது, 55 நாட்கள் ஆகியிருக்கும். வரும் ஜூன் 8ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு 39 வயது, 343 நாட்கள். இரண்டாவது முறையாக "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இவர் தான் மிக அதிக வயதான வீரர். கேப்டன்களில் அயர்லாந்தின் போர்டர் பீல்டு தான் (24 வயது, 275 நாட்கள்) இளவயது கேப்டன். நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜெரோயன் ஸ்மித் (36 வயது, 349 நாட்கள்) தான் இந்த தொடரில் பங்கேற்கும் கேப்டன்களில் வயதான கேப்டன்.

"ஹேப்பி பர்த்டே'

இங்கிலாந்தில் இன்று முதல் அடுத்து வரும் 17 நாட்களுக்கு ஐ.சி.சி., சார்பில் "டுவென்டி-20' உலக கோப்பை போட்டி நடக்கிறது. இந்த 17 நாட்களில் வெவ்வேறு அணிகளின் 9 வீரர்கள் தங்கள் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளில் தலா இரு வீரர்களும், தென் ஆப்ரிக்கா சார்பில் ஒரு வீரரும் பிறந்த நாள் கொண்டாட உள்ளனர். வங்கதேசத்தின் ஷம்ஷர் ரஹ்மான், தொடரின் துவக்க நாளிலும், நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜெரோன் ஸ்மிட்ஸ் தொடரில் கடைசி வீரராகவும் பிறந்த நாள் கொண்டாடுவர். 12 அணிகளின் கேப்டன்களில் பிறந்த நாள் கொண்டாட உள்ள ஒரே கேப்டன் இவர் தான். இதில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்த நாள் கொண்டாட உள்ள வீரர்களின் விபரம்:

ஷம்ஷர் ரஹ்மான் (வங்க தேசம்), அப்துர் ரஜாக் (வங்கதேசம்), டேவிட் பிராசர் வாட் (ஸ்காட்லாந்து), தீவால்டு நெல் (ஸ்காட்லாந்து), சைமண்ட்ஸ் (ஆஸி.,), ஷேன் வாட்சன் (ஆஸி.,), ரூடு நிஜ் மான் (நெதர்லாந்து), ஜெரோன் ஸ்மிட்ஸ் (நெதர்லாந்து), ஆல்பி மார்கல் (தெ.ஆ.,)

இளம் மற்றும் சீனியர் வீரர்கள்

இந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் மொத்த அணிகளின் சார்பில் சுமார் 180 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமெர் இளம் வீரராகவும், இலங்கையின் ஜெயசூர்யா மூத்த வீரராகவும் இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் முகமது ஆமெர் இன்னும் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் இவர் களமிறங்கும் போது ஆமெர் 17 வயது, 55 நாட்கள் ஆகியிருக்கும். வரும் ஜூன் 8ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு 39 வயது, 343 நாட்கள். இரண்டாவது முறையாக "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இவர் தான் மிக அதிக வயதான வீரர்.

கேப்டன்களில் அயர்லாந்தின் போர்டர் பீல்டு தான் (24 வயது, 275 நாட்கள்) இளவயது கேப்டன். நெதர்லாந்து அணியின் கேப்டன் ஜெரோயன் ஸ்மித் (36 வயது, 349 நாட்கள்) தான் இந்த தொடரில் பங்கேற்கும் கேப்டன்களில் வயதான கேப்டன்.

வேதனையான சாதனை

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக முறை "டக்-அவுட்டாகி' ஏமாற்றியவர்கள் வரிசையில் ஒயுமா (கென்யா), போலக் (தென் ஆப்ரிக்கா), நஜிமுதின் (வங்கதேசம்), ஜெயசூர்யா (இலங்கை), மாஸ்கரன்ஹாஸ் (இங்கிலாந்து), லுக் ரைட் (இங்கிலாந்து) ஆகியோர் தலா 2 முறை டக்-அவுட்டாகியுள்ளனர். இந்தியா சார்பில் தினேஷ் கார்த்திக், கவுதம் காம்பிர், ராபின் உத்தப்பா ஆகியோர் தலா ஒரு முறை டக்-அவுட்டாகி ஏமாற்றியுள்ளனர்.

கெய்ல் - ஸ்மித் அபாரம்

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல்-டேவன் ஸ்மித் ஜோடி முதலிடம் வகிக்கிறது. இந்த ஜோடி கடந்த 2007ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்தது. இதுவே எந்த ஒரு விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும். இந்தியாவின் சேவக், காம்பிர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 136 ரன்கள் சேர்த்துள்ளது.

கென்யா சோகம்

இதுவரை நடந்துள்ள "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்சில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணியாக கென்யா அணி உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 16.5 ஓவரில் 73 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது இடத்தில் வங்கதேசம் அணி (15.5 ஓவர், 83/10, எதிர்-இலங்கை) உள்ளது.

ஹைடன் அசத்தல்

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஹைடன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 6 போட்டியில் விளையாடியுள்ள இவர், 4 அரைசதம் உட்பட 265 ரன்கள் குவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் காம்பிர் (227), மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் மிஸ்பா (218) உள்ளனர்.

முதல் ஓவரில் 2 விக்கெட்

"டுவென்டி-20' சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் டேரன் மட்டி, தனது முதல் ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 2007 உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது டேரனை முதன் முதலாக பந்துவீச அழைத்தார் கேப்டன் கோலிங்வுட். டேரன் வீசிய இந்த ஓவரின் 2வது பந்தில் மெக்மிலனும், 4வது பந்தில் ஓரமும் அவுட்டாகினர்.

7881 ரன்கள்

தென் ஆப்ரிக்காவில் நடந்த முதல் "டுவென்டி-20' உலககோப்பை தொடரில், 12 அணிகள் மோதின. இத்தொடரில் மொத்தம் 7881 ரன்கள் எடுக்கப்பட்டன. இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 1000 ரன்கள் குவித்து சாதனை படைத்தன. அதிகபட்சமாக பாகிஸ்தான் 1106 ரன்களை குவித்து முதலிடத்தை பெற்றது. இரண்டாவது இடத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 1037 ரன்களை பதிவு செய்தது.

டிவிலியர்ஸ் கலக்கல்

"டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் அதிக "கேட்ச்' பிடித்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 6 "கேட்ச்' பிடித்துள்ளனர். இந்தியா சார்பில் தினேஷ் கார்த்திக், ஹர்பஜன் சிங் இருவரும் அதிகபட்சமாக தலா 3 "கேட்ச்' பிடித்துள்ளனர்.

கில்கிறிஸ்ட் அபாரம்

"டுவென்டி-20' உலக கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்ச் சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் வரிசையில் ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டியில் 9 "கேட்ச்' பிடித்து விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இவரை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவின் பவுச்சர், வங்கதேசத்தின் முஸ்பிகுர் ரகிம் இருவரும் தலா 7 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளனர். இந்தியா சார்பில் தினேஷ் கார்த்திக் (2), கேப்டன் தோனி (1) விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளனர்.

இமாலய ஸ்கோர் எடுத்த அணிகள்


கிரிக்கெட் அரங்கில் "மெகா ஸ்கோர்' எடுத்து அணிகள் சாதனை படைத்துள்ளன. டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தினால் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணிஅணிகள் வலுவான ஸ்கோரை எடுத்துள்ளன.

முதலிடத்தில் இலங்கை

டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது. கடந்த 1997ல் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 952 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதில் ஜெயசூர்யா (340), மகானமா (225), அரவிந்த் டிசில்வா (126) ஆகியோர் அபாரமாக ஆடி வலுவான ஸ்கோருக்கு கைகொடுத்தனர். இந்தியாவைப் பொறுத்தவரை 2004ல் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அதிகபட்சமாக 7 விக்கெட்டுக்கு 705 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இப்போட்டியில் சச்சின் (241*), லட்சுமண் (178) சூப்பராக ஆடினர்.

தென் ஆப்ரிக்கா அபாரம்

ஒருநாள் போட்டியிலும் அதிக ரன்கள் சேர்த்த அணிகள் வரிசையில் இலங்கை அணி முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2006ல் அம்ஸ்டெல்வீனில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. இதில் ஜெயசூர்யா 157, தில்ஷன் 117 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 2007ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில் பெர்முடா அணிக்கு எதிராக 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டியில் சேவக் 114 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு
எதிராக 438 ரன்களை "சேஸ்' செய்து சாதித்தது.

சேவக் அதிரடி

"டுவென்டி-20' போட்டியிலும் இலங்கை அணி தான் அதிக ரன்கள் எடுத்துள்ளது. கடந்த 2007ல் கென்யாவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில் நடந்த போட்டியில் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் குவித்தது.இந்திய அணி 2007ல் டர்பனில் நடந்தஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில்4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்து 3வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் சேவக் அதிரடியாக 68 ரன்கள் எடுத்தார்.

உலகக் கால்பந்து தரவரிசை:147-வது இடத்தில் இந்தியா


உலகக் கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் புதன்கிழமை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆசியப் பிரிவில் இந்தியா 23வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரேசில், இங்கிலாந்து, ஆர்ஜெண்டீனா, குரோஷியா, ரஷியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன.

20 ஓவர் கிரிக்கெட்டில் அணிகளின் அனுபவம்

20 KYŸ NŸYÚRN f¡eÙLy ÚTÖyz 2005-• ஆண்டு ˜R¥ SP‹‰ Y£f\‰. C‡¥ JªÙYÖ£ A‚L¸Á ÙY¼½ ÚRÖ¥« «YW• Y£UÖ¿:


A‚ ByP• ÙY¼½ ÚRÖ¥« NUÁ ˜z«¥ÛX

B͇ÚW¦VÖ 21 11 10 0 0

YjLÖ[ÚRN• 10 3 7 0 0

CjfXÖ‹‰ 15 6 9 0 0

C‹‡VÖ 13 7 4 1 1

AVŸXÖ‹‰ 4 3 0 0 1

BX‹‰ 4 2 1 0 1

ŒïpXÖ‹‰ 21 8 11 2 0

TÖfÍRÖÁ 17 13 3 1 0

ÍLÖyXÖ‹‰ 6 2 3 0 1

ÙRÁB‘¡eLÖ 18 11 7 0 0

CXjÛL 13 8 5 0 0

ÙYÍy C{Í 11 4 5 2 0