அதிக முறை "டக்' விக்கெட் எடுத்தவர்

கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வீரர்களை (104) டக் அவுட் ஆக்கியவர் என்ற சாதனைக்குரியவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரத். வசீகரமான மிதவேகப் பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்களையும் கவர்ந்தவர்.

மெக்ரத், ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ செüத்வேல்ஸில் 1970-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி பிறந்தார். 1993-ல் நியூ செüத்வேல்ஸ் அணிக்காக முதன் முறையாக கிரிக்கெட்டில் களமிறங்கினார். அதற்கு அடுத்த ஆண்டே ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடித்தார்.


1993 நவம்பரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா- நியூசிலாந்து டெஸ்ட் தொடரே மெக்ரத்துக்கு முதல் சர்வதேச போட்டியாகும். அதே ஆண்டு டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார்.


1995-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா வென்றது. வேகப் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வந்த, மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சாளர்களே வியக்கத்தகும்
வகையில் அந்த தொடரில் மெக்ரத் சிறப்பாக பந்து வீசினார்.


தனது அசாதாரணமான பந்து வீச்சின் மூலம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளராக பரிமளித்தார்.


100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை 2004-ம் ஆண்டு மெக்ரத் பதிவு செய்தார். 2005-ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி. சூப்பர் சீரியஸ் போட்டியில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். முதல் மூன்று இடங்களிலும் உள்ளவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் (முரளீதரண், வார்னே, கும்ப்ளே).


2005-ம் ஆண்டு நடந்த ஆஷஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில், மார்கஸ் டிரெஸ்கோதிக்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.


2006 டிசம்பரில் தொடங்கிய அடுத்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்தது. இந்த வெற்றியில் மெக்ரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் 21 விக்கெட்டுகளை மெக்ரத் வீழ்த்தினார். 2007-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தோடு கிரிக்கெட்டிலிருந்து மெக்ரத் ஓய்வு பெற்றார்.


124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுகளையும், 250 ஒரு நாள் போட்டிகளில் 381 விக்கெட்டுகளையும் மெக்ரத் வீழ்த்தியுள்ளார். பீல்டிங்கிலும் மெக்ரத் சிறந்து விளங்கினார். 6 அடி 5 அங்குல உயரம் கொண்ட மெக்ரத், பந்தை சரியாக த்ரோ செய்வதில் வல்லவர்.


மேலும், ஒரே பேட்ஸ்மேனை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனைக்கும் உரியவர் மெக்ரத். இங்கிலாந்தின் மைக் ஆதெர்டனை மட்டும் 19 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.


2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.


மெக்ரத்துக்கு ஜேம்ஸ், ஹோலி என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி ஜேன் லூயிஸ் புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு உயிரிழந்தார். மெக்ரத், தன் மனைவியுடன் சேர்ந்து துவக்கிய மெக்ரெத் அறக்கட்டளை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுக்கு நிதிதிரட்டும் சேவையில் ஈடுபட்டுள்ளது.

அர்ப்பணிப்புடன் விளையாடுகிறேன்: சச்சின்

கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த நாள் முதல், இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடி வருகிறேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.


சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின். இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த உள்ள இவர், கோப்பை வெல்ல காத்திருக்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த நாள் முதலாக, இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறேன். நான் கிரிக்கெட்டை மதிக்கிறேன். எங்கே சென்று விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. தரமான போட்டிகள் எங்கு நடந்தாலும், அங்கு சென்று திறமை வெளிப்படுத்த விரும்புகிறேன்.


சாம்பியன்ஸ் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். அதை விட இந்தியாவுக்காக விளையாடுவது தனிச் சிறப்பு. மும்பையும், இந்தியாவும் இணையும் போது, மும்பை இந்தியன்ஸ் உருவாகிறது. இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சில் சிறந்தவர்

ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு முறையின் மூலம் கிரிக்கெட்டில் தனி முத்திரைப் பதித்தவர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ்.

தான் விளையாடிய காலங்களில் சக வீரர் வாசிம் அக்ரமுடன் ஜோடி சேர்ந்து எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வெஹாரியில் 1971-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி பிறந்தார் யூனிஸ். ஒரு நாள் போட்டியில் 416 விக்கெட்டுகள், டெஸ்ட் போட்டியில் 373 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்க வீரராக விளங்குகிறார்.

1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியே, யூனிஸின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். இதே ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரும் முதல் முறையாக களமிறங்கினார் என்பது கூடுதல் சிறப்பம்சம். முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் யூனிஸ். டெண்டுல்கர், கபில்தேவ் விக்கெட்டுகளும் இதில் அடங்கும்.

தொடர்ந்து தனது வேகப் பந்து வீச்சு மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் கிரிக்கெட் உலகில் சிறப்பிடம் பெற்றார். புரேவாலா எக்ஸ்பிரஸ், விக்கி என சிறப்பு பெயர்களும் அவருக்கு உண்டு. இன்ஸ்விங் யார்க்கர் முறையிலும் சிறந்து விளங்கியவர் யூனிஸ்.

1993-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மணிக்கு 153 கி.மீ. வேகத்தில் பந்து வீசியதே அவரது அதிகபட்ச பந்துவீச்சு வேகமாகும். 1992-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் சிறப்பான வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சு குறித்து இங்கிலாந்து பத்திரிகைகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பின. பின்னர், இந்த சர்ச்சை தவறானது என நிரூபிக்கப்பட்டது.

2000 முதல் 2003-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக யூனிஸ் பொறுப்பேற்றிருந்தார். 2003-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தொடர்ச்சியாக மூன்று ஒரு நாள் ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனைக்குரியவர் யூனிஸ். 1992-ம் ஆண்டு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருது யூனிஸýக்கு வழங்கப்பட்டது.

பந்து வீச்சில் யூனிஸýக்கு இருந்த திறமையை கருத்தில் கொண்டு 2006-ம் ஆண்டில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2010 பிப்ரவரியில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

யூனுஸýக்கு இடது கை சிறுவிரல் கிடையாது. அவர், ஒரு சமயம் நீச்சலில் ஈடுபட்ட போது இடது கையில் அடிபட்டு சிறுவிரல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிக எதிர்பார்ப்பில் சச்சின்

இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக, பல தனியார் அமைப்புகள் இணைந்து செயல்படுகிறது.

இவர்கள் இணைந்து வரும் செப்., 26 முதல் அக்., 2 வரை, "கொடுத்து மகிழுங்கள்' (ஜாய் ஆப் கிவ்விங்) என்ற தேசிய இயக்கம் மூலம் பெருமளவு உதவியை திரட்ட உள்ளனர். இதன் தூதராக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய கிரிக்கெட்டின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1989, நவ.,15ம் தேதி சச்சின் இந்திய அணியில் அறிமுகமானார். தொடர்ந்து அசத்தல் பேட்ஸ்மேனாக நீடித்து மாஸ்டர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த, இவர் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். தனிப்பட்ட முறையில் 200 குழந்தைகளுகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கும் இவர் உதவி வருகிறார்.

இதுதவிர, கடந்த ஆண்டு "கொடுத்து மகிழுங்கள்' என்ற தேசிய அமைப்புடன் இணைந்தும் பெருமளவு உதவிகள் குவிய வழிவகுத்தார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இதன் தூதராக நியமிக்கப்பட்ட சச்சின் இதுகுறித்து அவர் கூறியது:

கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சிக்காக நான் கிரிக்கெட் முகாம் நடத்தினேன். இதில் என்னுடன் நேரத்தை செலவிட அதிக அளவில் ஏலம் கேட்ட, 25 முதல் 30 பேர்கள் பங்கேற்றனர். இதில் பாதி இளைஞர்கள், பாதி வயதானவர்கள். அவர்களுடன் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன்.

பேட்டிங்கின் போது எதிர் முனையில் (22 மீ.,தொலைவு) இருந்து 137 கி.மீ., வேகம் முதல் பல வேகங்களில் வரும் பந்தை எதிர்கொள்வது குறித்து கூறினேன். ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை. மொத்தத்தில் இந்த முகாம் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தது. ஆனால் இதை மிகைப்படுத்தி விட்டனர்.

இப்போதும் உண்டு:

இந்த ஆண்டு தான் என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஏனெனில் விரைவில் <உலக கோப்பை உட்பட பல தொடர்கள் வரவுள்ளது. இதனால் நேரம் கிடைப்பது கடினம். இருப்பினும் மக்கள் பலரும் என்னுடன் நேரத்தை செலவிட ஆர்வமாக உள்ளனர். அவர்களுடன் கிரிக்கெட்டை பகிர்ந்து கொள்ள மீண்டும் சிறிய அளவில் முகாம் நடத்த உள்ளேன்.

அதிக எதிர்பார்ப்பு:

ஆனால் இம்முறை அதிக அளவில் தொகையை எதிர்பார்க்கிறேன். அதாவது என்னுடன் நேரம் செலவிட விரும்புவர்கள் அதிக அளவில் ஏலம் கேட்க வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டு அதிகபட்ச இலக்கு வைத்துள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதிலும் <உள்ளவர்கள் உதவ வேண்டும். அப்போது எங்களால் பெரிய இலக்கை அடைய முடியும்.

உங்களால் முடியும்:

இந்நிகழ்ச்சி மூலம் நமது மக்களுக்கு <உதவ, உங்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு தான் தர வேண்டும் என்று யாரையும் சொல்ல மாட்டேன். <ஒரு லட்சம், ஆயிரம், நூறு அல்லது ஐம்பது ரூபாய் என உங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடை கொடுத்து <உதவுங்கள். இதனால் உதவி பெறுபவர்கள் முகத்தில் புன்னகையை காணலாம். இது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும்.

அதிக ஈடுபாடு:

கிரிக்கெட்டின் மீது தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன். எனது பள்ளி நாட்களில் இருந்து இப்போது வரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டுள்ளேன். தவிர, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவும் நிறைவேறியது. மீதமுள்ள நேரங்களில் இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு <உதவுவது மகிழ்ச்சி தான்.

விவரிக்க முடியாது:

இதேபோல மைதானத்தில் என்னை பாராட்டி, எனது பெயரை உச்சரிக்கும் போதும் மகிழ்ச்சி ஏற்படும். இதை விவரிப்பது என்பது மிகவும் கடினமானது. இதுபோன்ற செயல்கள் தான் கிரிக்கெட் வீரரின் வளர்ச்சிக்கு உதவும். அவர்களை எப்போதும் சிறப்பாக சாதிக்க தூண்டும்.
ஓய்வு இல்லை:

கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை. ஒருவேளை அப்படி ஒரு திட்டம் இருந்தால், உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன். தற்போதைக்கு கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறேன். மற்றபடி வேறு எந்த எண்ணமும் இல்லை.
இவ்வாறு சச்சின் கூறினார்.

இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்

கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், வங்கதேச வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்கள் லார்ட்ஸ் டெஸ்டில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டு பிடிபட்டனர். இதையடுத்து சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத் மற்றும் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆஸ்திரேலிய வீரர்கள் வாட்சன், ஹாடின், பிரட் லீ மற்றும் மைக்கேல் ஜான்சன் ஆகியோரும், தங்களை இந்திய சூதாட்ட ஏஜன்ட்கள் அணுகியதாக தெரிவித்தனர். இந்த பிரச்னையில் புதிய திருப்பமாக, வங்கதேச வீரர்களையும் இந்திய ஏஜன்ட்டுகள் அணுகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரியில் இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க வங்கதேசம் சென்றது. இதில் இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. அப்போது வங்கதேச அணியின் துணைக்கேப்டன் சாகிப் அல் ஹசன், துவக்க வீரர் தமிம் இக்பால் ஆகிய இருவரையும் "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகியுள்ளனர்.

இதுகுறித்து பி.சி.பி., செய்தித்தொடர்பாளர் ஜலால் யூனிஸ் கூறியது:

இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது, எங்களது சீனியர் வீரர்கள் இருவரை சூதாட்ட ஏஜன்ட்டுகள் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள், இதுகுறித்து எங்களிடம் உடனடியாக தெரிவித்தனர். நாங்கள் உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்புக் குழுவிடம் தெரிவித்தோம்.

தற்போது வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடாமல் தடுப்பது குறித்து கல்வியறிவு போதித்து வருகிறோம். இதன்மூலம் "மேட்ச் பிக்சிங்' காரணமாக எதிர்காலம் எப்படி பாதிக்கப்படும், தேசத்துக்கு எப்படி அவமானம் நேரும் என்பது குறித்து அறியலாம். தவிர, சாதாரண நபருக்கும் சூதாட்ட ஏஜன்ட்டுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

முன்பின் அறியாதவர்களை சந்திக்க வேண்டாம் என்றும், அடையாளம் தெரியாமல் வரும் போன் கால்களை பேசவேண்டாம் என்றும் வீரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு ஜலால் யூனிஸ் தெரிவித்தார்.

இதனிடையே வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல்லும், வெளிநாட்டு தொடரின் போது தன்னையும் சூதாட்டக்காரர்கள் தொடர்பு கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.