20 ஓவர் போட்டியில் 3 ஆண்டுகள் விளையாடுவேன்
காத்திருக்கும் சாதனை
ஜெயசூர்யா முதலிடம்:ஒருநாள் அரங்கில் அதிக போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இலங்கையின் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 444 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் சச்சின் (442 போட்டி), பாகிஸ்தானின் இன்சமாம் (378), வாசிம் அக்ரம் (356), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (351) உள்ளனர்.
நழுவிய வாய்ப்பு:இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அடுத்து, இந்தியா-இலங்கை-நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இத்தொடருக்கான இந்திய அணியில் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அதிக ஒரு நாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவர் இச்சாதனை படைக்க, இன்னும் இரண்டு மாத காலம் காத்திருக்க வேண்டும்.
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் சச்சின் விளையாடும் பட்சத்தில், புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.
புதிய சாதனை படைத்தார் சச்சின்
டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இது டெஸ்ட் அரங்கில் சச்சின் பங்கேற்கும், 169 வது போட்டியாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (168 வது போட்டி) சாதனையை தகர்த்தார் சச்சின். புதிய சாதனை படைத்துள்ள இவர், டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கு, வெகுவாக மாறி விட்டது என்றார்.
கடந்த 1989 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய போது, முன்னணி பவுலர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இம்ரான் கான், அப்துல் காதிர் ஆகியோரது பந்து வீச்சை எதிர்கொண்டது சற்று வித்தியாசமாக இருந்தது. இது தான் எனது முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என மனதில் நினைத்தேன். ஆனால் அடுத்த போட்டியில், சிறப்பாக ஆடி ரன் குவித்தேன். அதற்குப் பின் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
மிகப்பெரிய கவுரவம்: "சச்சின் என்னைப் போலவே பேட்டிங் செயகிறார்,'என ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் தெரிவித்ததை, கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதற்குப் பின் பிராட்மேன் தேர்வு செய்த உலக லெவன் வீரர்கள் பட்டியலில் என்னையும் இணைத்தது, புதிய உற்சாகத்தை அளித்தது. ஒரு விளையாட்டு வீரருக்கு, தலை சிறந்த வீரர்களின் பாராட்டு தன்னம்பிக்கை கொடுக்கும். இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய
"டாப்-6' வீரர்கள்:
கடவுள் கொடுத்த பரிசு: சச்சின்
சூப்பர் சிக்சர்
டுவென்டி-20' போட்டிகளில் சிக்சருக்கு பஞ்சமில்லை. வீரர்கள் தங்கள் அபார ஆட்டத்தால், சிக்சர் மழை பொழிகின்றனர்.
"டுவென்டி-20' அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 1100 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 39 சிக்சர் அடங்கும். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் (38 சிக்சர்), வெஸ்ட் இண்டீசில் கிறிஸ் கெய்ல் (34 சிக்சர்), ஆஸ்திரேலியாவின் காமிரான் ஒயிட் (31 சிக்சர்), டேவிட் வார்னர் (31 சிக்சர்) ஆகியோர் உள்ளனர்.
கெய்ல் அதிரடி: "டுவென்டி-20' போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் உள்ளார். இவர் கடந்த 2007ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 10 சிக்சர் விளாசினார். இவரை அடுத்து தென் ஆப்ரிக்காவின் போஸ்மேன் (9 சிக்சர்), பிரண்டன் மெக்கலம் (8 சிக்சர்), இந்தியாவின் யுவராஜ் சிங் (7 சிக்சர்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (7 சிக்சர்) ஆகியோர் உள்ளனர்.
மெக்கலம் அபாரம்: "டுவென்டி-20' அரங்கில் அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் உள்ளார். இவர் அதிகபட்சமாக 112 பவுண்டரி அடித்துள்ளார். இவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் சிங் (99 பவுண்டரி), இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (90 பவுண்டரி), இலங்கையின் தில்ஷன் (86 பவுண்டரி), மகிலா ஜெயவர்தனா (78 பவுண்டரி) ஆகியோர் உள்ளனர்.