விறுவிறு உலக கோப்பை விதிகள் - டிராவிட் வியப்பு

உள்வட்டத்துக்குள் 5 பேர் நிற்பது, இரண்டு புதிய பந்துகள் என, புதிய விதிகளால், உலக கோப்பை தொடரில் விறுவிறுப்பு அதிகரிக்கும்,’’ என, டிராவிட் தெரிவித்தார்.      

ஐ.சி.சி., சார்பில் 11வது உலக கோப்பை கிரிக்கெட், வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ளது.    
  
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:      

கடந்த 2011ஐ விட, ஒருநாள் போட்டிகளில் இம்முறை பல புதிய விதிமுறைகள் வந்துவிட்டன.  இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்துவதால், வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக ஆதிக்கம் செலுத்தலாம். ஆஸ்திரேலிய மைதானங்கள் சற்று பெரியது என்பதால், பவுண்டரிகள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல.    
   
முதல் 10 ஓவர்களில் 2 பீல்டர்கள் தான் உள் வட்டத்துக்கு வெளியே நிற்க வேண்டும். 40 ஓவர்களுக்கு முன்பாக ‘பேட்டிங் பவர்பிளேயை’ முடிப்பது, இந்த நேரத்தில் 3 பீல்டர்கள் மட்டும் வெளியில் இருப்பது தவிர, 50 ஓவர் முழுவதும் உள்வட்டத்துக்குள் 5 பீல்டர்கள் எப்போதும் நிற்க வேண்டும்.       


கேப்டன்களுக்கு சிக்கல்:

இது கேப்டன்களுக்கு சவாலானது. ஏனெனில், இந்த விதி காரணமாக ஐந்து முக்கிய பவுலர்கள் அணியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  இவர்களை வைத்து கட்டாயம் விக்கெட் வீழ்த்தியே ஆக வேண்டும். 

‘பார்ட் டைம்’ பவுலரை வைத்து சமாளிக்க முடியாது. இதனால்,  பீல்டிங் கட்டுப்பாடு காரணமாக, அதிக ரன்கள் சென்று விடும். இதுபோன்ற விதிகள், இம்முறை உலக கோப்பை தொடரை பெரிதும் எதிர்பார்க்க வைத்துள்ளன.


  ‘சுழல்’ முக்கியம்: 

இங்குள்ள ஆடுகளங்கள் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், சுழற்பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பர்.      

உலக கோப்பை தொடர் நீண்ட நாட்களுக்கு நடக்கும். இது கோடை காலம் என்பதால், ஆடுகளங்களின் தன்மை மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதற்கு தகுந்தாற் போல் பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் வித்தியாசமான தாக்குதல் யுக்திகளுடன் சிறப்பாக செயல்பட்டால் சாதிக்கலாம்.      

இவ்வாறு டிராவிட் கூறினார்.

0 comments:

Post a Comment