ஜடேஜாவை மிரட்டிய ஆண்டர்சன்

ஆண்டர்சனின் அநாகரிக நடத்தை அம்பலமாகியுள்ளது. ரவிந்திர ஜடேஜாவின் பல்லை உடைத்து விடுவதாக மிரட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டின்,  இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவை தள்ளி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, இரு அணிகள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரித்த ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன்,  ஜடேஜாவுக்கு, போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கமிஷனர் கார்டன் லீவிஸ் லுாயிஸ், இருவரையும் விடுவித்து அதிர்ச்சி தீர்ப்பு அளித்தார்.

சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில், ஆண்டர்சன் தனது தவறை ஒப்புக் கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் போர்டு வக்கீல் நடத்திய குறுக்கு விசாரணையின் போது, ஜடேஜாவை தள்ளி, பல்லை உடைப்பேன் என மிரட்டியதை ஒப்புக்கொண்டாராம். கிரிக்கெட் உணர்வுக்கு எதிராக செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், ‘வீடியோ’ ஆதாரம் இல்லாததால் தண்டனையில் இருந்து தப்பி விட்டார். இதனால், கேப்டன் தோனி உள்ளிட்ட பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

0 comments:

Post a Comment