எல்லை மீறினாரா தோனி - கடும் கோபத்தில் பி.சி.சி.ஐ.,

பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தோனிக்கு, பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளது.       இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டு, இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். விரைவில் பிளட்சர் நீக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.    ...

பதிலடி கொடுக்க இளம் படை ரெடி - ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், குல்கர்னி, கரண் சர்மா போன்ற இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர்.  இவர்கள், டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து, ஒருநாள் தொடரில் பயிற்சியாளர் பிளட்சருக்கு உதவ, சஞ்சய் பங்கர், பாரத் அருண் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்....

ராஜினாமா முடிவில் தோனி - முன்னாள் வீரர்கள் ஆவேசம்

டெஸ்ட் தொடரில் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  இங்கிலாந்து சென்ற இந்திய அணி, நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. அடுத்து லார்ட்சில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. 1–0 என, முன்னிலை பெற்றவுடன் இந்திய வீரர்கள் வெற்றி மிதப்பில் சொதப்ப துவங்கினர்.  பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பினர். இவர்களை முன்னேற்ற பயிற்சியாளர் பிளட்சர்...

12 ஆயிரம் ரன்னை தவறவிட்ட சங்ககரா

பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்டில் 2–வது இன்னிங்சில் இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா 12 ஆயிரம் ரன்னை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  அதற்கு அவருக்கு 17 ரன் தேவைப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் 5 ரன் எடுத்த நிலையில் (59 ரன்னில் அவுட்) பெவிலியன் திரும்பினார். 128 டெஸ்டில் விளையாடி உள்ள சங்ககரா 11,988 ரன் எடுத்து உள்ளார். 12 ஆயிரம் ரன் எடுக்க அவருக்கு இன்னும் 12 ரன் தேவை.  அடுத்த டெஸ்ட் தொடரில் தான் அவரால் இதை எடுக்க முடியும். டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் சங்ககரா 5–வது இதில் உள்ளார். தெண்டுல்கர் 15,921...

முதலிடம் பிடித்தார் அஷ்வின்

ஐ.சி.சி., டெஸ்ட் ‘ஆல்–ரவுண்டருக்கான’ ரேங்கிங்கில் (தரவரிசை), இந்தியாவின் அஷ்வின் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில், இலங்கையின் சங்ககரா மீண்டும் முதலிடம் பிடித்தார்.       டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), துபாயில் நேற்று வெளியிட்டது.  இதில், ‘ஆல்–ரவுண்டர்’களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் அஷ்வின், 372...

ஐ.சி.சி., விதிமுறை மாற்றப்படுமா?

ஐ.சி.சி., விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் எவ்வித திட்டமும் இல்லை,’’ என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சீனிவாசன் தெரிவித்தார்.  இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா ‘தள்ளு’ விவகாரம் குறித்து விசாரித்த ஐ.சி.சி., கமிஷனர் கார்டன் லீவிஸ், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி இருவரையும் விடுவித்தார்.  இதை எதிர்த்து ஐ.சி.சி., ‘அப்பீல்’ செய்ய வேண்டும் என்ற, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.  இதன்...

ஜடேஜாவை மிரட்டிய ஆண்டர்சன்

ஆண்டர்சனின் அநாகரிக நடத்தை அம்பலமாகியுள்ளது. ரவிந்திர ஜடேஜாவின் பல்லை உடைத்து விடுவதாக மிரட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார். நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டின்,  இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவை தள்ளி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, இரு அணிகள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன்,...

ராகுல் தயவில் சச்சினுக்கு பாரத ரத்னா

சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியதன் பின்னணியில் ராகுல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் சாதனை வீரர் சச்சின், 41. சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் அடித்தவர். 24 ஆண்டுகால கிரிக்கெட் திறமையை கவுரவிக்கும் வகையில், இவர் ஓய்வு பெற்ற (2013, நவ., 16) சில மணி நேரங்களில், நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.  இவ்விருது மறைந்த ‘ஹாக்கி ஜாம்பவான்’ தியான்சந்த்துக்கு தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓட்டு...