
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கோஹ்லி, புஜாரா முக்கியப்பங்கு வகிப்பார்கள்,’’ என, இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் பீட்டர்சன் தெரிவித்தார்.
இந்திய அணி கடந்த 2011ல் இங்கிலாந்து சென்றது. டெஸ்ட் தொடரை 0–4 என இந்தியா மோசமாக பறிகொடுத்தது. இதன் முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், இந்தியா (ஜூலை 9– செப்.7) மீண்டும் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட், 5 ஒரு நாள், 1 ‘டுவென்டி–20’யில் பங்கேற்கிறது.
இது குறித்து பீட்டர்சன் கூறியது: இங்கிலாந்து அணி புத்துணர்வுடன் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வியக்கத்தக்க முறையில் உள்ளது. எனவே இவர்கள் மோதவுள்ள தொடர் சிறப்பானது.
கடந்த முறை டிராவிட் மட்டுமே நிலைத்து நின்று விளையாடினார். தற்போது, இந்திய அணியில் கோஹ்லி, புஜாரா, முரளி விஜய் உள்ளிட்டோர் ரன் சேர்க்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள். இத்தொடரில் இவர்கள் முக்கியப்பங்கு வகிப்பார்கள். தவிர, இவர்கள் அங்கு ரன் குவிக்காவிட்டால் பிரச்னைதான்.
இங்கிலாந்துக்கு இழப்பு:
இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுவான், ஆஷஸ் தொடரின் பாதியில் ஓய்வை அறிவித்தார். இவர் இல்லாதது அணிக்கு பெரும் இழப்புதான்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 2015ல் நடக்கவுள்ள உலக (50 ஓவர்) கோப்பை தொடரில், சாம்பியன் பட்டம் வெல்ல ஒவ்வொரு அணியும் தகுதியானதுதான்.
ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.
0 comments:
Post a Comment