ஜென்டில்மேன் ஆட்டமா கிரிக்கெட்?

கிரிக்கெட்டை ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு என அழைப்பார்கள். ஆனால், களத்தில் வீரர்களின் செயல்பாடு மோசமாகவே உள்ளது.

* 1981ல் பெர்த்தில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, பாகிஸ்தானின் ஜாவித் மியாண்தத்தை உதைத்ததாக கூறப்பட்டது. பதிலுக்கு மியாண்தத், பேட்டை உயர்த்திக் கொண்டு வர ‘டென்ஷன்’ ஏற்பட்டது.

* 1992, உலக கோப்பை தொடரில் இந்தியாவின் கிரண் மோரே, மியாண்தத் மோதல், 1996, உலக கோப்பை தொடரில் அமிர் சோகைல், பிரசாத் உரசல், 2008ல் நடந்த சிட்னி டெஸ்டில் ஹர்பஜன்–சைமண்ட்ஸ் சர்ச்சை, 2010ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் கம்ரான் அக்மல், காம்பிர் முறைத்துக் கொண்டது என ஏராளமான சம்பவங்களை குறிப்பிடலாம்.

முதல் வீரர்:

ஆனாலும் பெர்முடா சம்பவம் தான் மிக மோசமானது. 

இங்கு,  குத்துச்சண்டை, கிக் பாக்சிங், மல்யுத்தம் போல வீரர்கள் மோதிக் கொண்டனர். களத்தில் எதிரணி வீரருடன் மோதலில் ஈடுபட்டு, வாழ்நாள் தடை பெறும் முதல் வீரரானார் ஜேசன் ஆண்டர்சன். 

0 comments:

Post a Comment