இந்திய அணி அறிவிப்பு - குர்கீரத் சிங் வாய்ப்பு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ குர்கீரத் சிங் அறிமுக  வாய்ப்பு பெற்றுள்ளார். 

இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’, ஐந்து ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ போட்டி வரும் அக்., 2ல் தரம்சாலாவில் நடக்கவுள்ளது. 

மீதமுள்ள போட்டிகள் கட்டாக் (அக்., 5,), கோல்கட்டா (அக்., 8) நகரங்களில் நடக்கவுள்ளன. ஐந்து ஒருநாள் போட்டிகள் முறையே கான்பூர் (அக்., 11), இந்துார் (அக்., 14), ராஜ்காட் (அக்., 18), சென்னை (அக்., 22), மும்பை (அக்., 25) நகரங்களில் நடக்கவுள்ளன. 

நான்கு டெஸ்ட் போட்டிகள் முறையே சண்டிகர் (நவ., 5–9), பெங்களூரு (நவ., 14–18), நாக்பூர் (நவ., 25–29), டில்லி (டிச.,3–7) ஆகிய இடங்களில் நடக்கின்றன.

முதற்கட்டமாக ‘டுவென்டி–20’ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் பாட்டீல் தலைமையில் பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு கமிட்டி கூட்டம் பெங்களூருவில் நடந்தது. இதன் பின் 15 வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. 

குர்கீரத் சிங் வாய்ப்பு:

ஒரு நாள் மற்றும் ‘டுவென்டி–20’ அணியை வழக்கம்போல, தோனி வழிநடத்துகிறார். ஒரு நாள் அணியில், சமீபத்திய வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ‘ஆல்–ரவுண்டர்’ குர்கீரத் சிங் வாய்ப்பு பெற்றுள்ளார். மற்றபடி தவான், கோஹ்லி, ரெய்னா, ரகானே, அஷ்வின், அமித் மிஸ்ரா, பின்னி, ராயுடு உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். ‘ஆல்–ரவுண்டர்’ ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. 

‘டுவென்டி–20’ அணியில் பந்துவீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார். ரெய்னா, ராயுடு, ஹர்பஜன், அக்சர் படேல், மோகித் சர்மா, புவனேஷ்வர், உள்ளிட்டோருக்கும் இடம் கிடைத்துள்ளது. 

ஒரு நாள் அணி: தோனி (கேப்டன்), அஷ்வின், பின்னி, தவான், கோஹ்லி, புவனேஷ்வர், அக்சர் படேல், ரகானே, ரெய்னா, ராயுடு, மோகித் சர்மா, ரோகித், உமேஷ், குர்கீரத் சிங், அமித் மிஸ்ரா. 

‘டுவென்டி–20’ அணி: தோனி (கேப்டன்), அஷ்வின், பின்னி, தவான், கோஹ்லி, புவனேஷ்வர், அக்சர் படேல், ரகானே, ரெய்னா, ராயுடு, மோகித் சர்மா, ரோகித், ஸ்ரீநாத் அரவிந்த், ஹர்பஜன், அமித் மிஸ்ரா

0 comments:

Post a Comment