இந்திய இளம் வீரர் இரட்டை சதம்

ரயில்வே அணிக்கு எதிரான 19வயது கிரிக்கெட் 50 ஓவர் போட்டியில், ராஜஸ்தானின் ஆதித்யா கார்வல், 263 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இளம் வீரர்கள் (19 வயது) பங்கேற்கும், வினோ மன்கட் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன், மத்திய மண்டலத்தை சேர்ந்த ராஜஸ்தான், ரயில்வே அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆதித்யா கார்வல், 151 பந்துகளில், 18 சிக்சர், 22 பவுண்டரி உட்பட, மொத்தம் 263 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 50 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்தது.

பின் களமிறங்கிய ரயில்வே அணி, 42.2 ஓவரில் 147 ரன்னுக்கு சுருண்டு, 266 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராஸ்தான் வீரர் ஷுபம் சர்மா, 5 விக்கெட் வீழ்த்தினார்.

0 comments:

Post a Comment