சென்னை வலையில் தப்புமா டால்பின்ஸ்

பெங்களூருவில் இன்று நடக்கும் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் சென்னை, தென் ஆப்ரிக்காவின் டால்பின்ஸ் அணிகள் மோதுகின்றன.       

சென்னை அணி கடந்த முறை கோல்கட்டாவிடம் தோற்ற சோகத்தில் உள்ளது. டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் வலுவான அடித்தளம் அமைக்காமல் போனதே இதற்கு முக்கியக்காரணம். 

இவர்கள் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். ‘மிடில்–ஆர்டரில்’ ரெய்னா, டுபிளசி கைகொடுத்தால் நல்லது. கேப்டன் தோனி தனது பணியை சிறப்பாக செய்கிறார். கடந்த போட்டியில் இவருடன் கைகோர்த்த டுவைன் பிராவோ இன்றும் அசத்த வேண்டும்.       

நெஹ்ரா நம்பிக்கை: கோல்கட்டாவுக்கு எதிராக மிரட்டிய அனுபவ நெஹ்ரா 4 விக்கெட் வீழ்த்தினார். 

இவரது ‘வேகம்’ மீண்டும் எடுபட்டால், எதிரணியின் கூடாரம் காலியாவது உறுதி. ஈஷ்வர் பாண்டே, அஷ்வின் ஜடேஜா எழுச்சி பெற்றால், சென்னை அணி முதல் வெற்றியை ருசிக்கலாம்.     
  
ஜுன்டோ நம்பிக்கை: டால்பின்ஸ் அணியின் கேப்டன் மார்னே வான், டெல்போர்ட் உள்ளிட்டோர் கடந்த போட்டியில் ஒற்றை இலக்கில் வெளியேறினர். 

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அரை சதம் கடந்த ஹயா ஜுன்டோ மட்டும் நம்பிக்கை தருகிறார்.  கேசவ், டார்யன் ஸ்மித் போன்ற வீரர்கள்  திறமை நிரூபிக்க முயற்சிக்கலாம்.       

0 comments:

Post a Comment