பயிற்சியாளர் பதவி - ரவி சாஸ்திரி புலம்பல்

‘‘இந்திய அணி பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் தான். அதேநேரம் பி.சி.சி.ஐ.,யின் இச்செயல் ஆச்சரியம் தரவில்லை,’’ என, ரவி சாஸ்திரி தெரிவித்தார்.  இந்திய அணியின் ‘இயக்குனராக’ கடந்த 18 மாதங்கள் இருந்தவர் ரவி சாஸ்திரி. இவர் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.  புதிய திருப்பமாக ‘சுழல்’ ஜாம்பவான் கும்ளேயும், போட்டியில் குதித்தார். கடைசியில் வாய்ப்பு கும்ளேவுக்கு சென்றது. இதுகுறித்து...

தெறிக்க விட்ட சென்னை - டில்லியை வீழ்த்தியது

ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் இன்று சென்னை வீரர்கள் 4 கோல் அடித்து டில்லி அணியை  தெறித்து ஓடச் செய்தனர்.  இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நடக்கிறது. சென்னை நேரு மைதானத்தில் இன்று நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணியை எதிர்கொண்டது. இதில் ஜேஜே 2, மென்தோஜா 1, பெலிசாரி 1 என, சென்னை அணி 4 கோல் அடித்தது. டில்லி அணி சார்பில் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் சென்னை அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ...

சேவக்கை தடுத்த சச்சின்

‘‘கடந்த 2007ல் ஓய்வு பெற்றுவிடலாம் என முடிவு செய்தேன். இதை சக வீரர் சச்சின்தான் தடுத்து விட்டார்,’’ என, இந்திய அணி முன்னாள் வீரர் சேவக் தெரிவித்தார். இந்திய அணியின் அதிரடி வீரர் சேவக், 37. டெஸ்ட் அரங்கில் இரு முறை முச்சதம் உள்ளிட்ட அதிக சாதனைகளை எட்டியவர். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சமீபத்தில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட உள்ளார்.  இது...

தோனிக்கு எதுவுமே தெரியலை - கவாஸ்கர் திடீர் தாக்கு

இந்திய அணி கேப்டன் தோனியிடம் புதிய திட்டங்களை செயல்படுத்தும் திறன் இல்லை. பவுலர்களை சரியான முறையில் கையாளத் தெரியவில்லை,’’ என, கவாஸ்கர் குற்றம் சுமத்தினார். இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என, வென்றது. மும்பையில் நடந்த கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்டுக்கு 438 ரன் குவித்தது. இந்திய பவுலர்கள் சொதப்பல் காரணமாக குயின்டன் டி காக், டுபிளசி, டிவிலியர்ஸ் என, 3...

கும்ளே முதலிடம்

சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் கும்ளே (48 விக்.,), ஹர்பஜன் சிங் (42), கபில்தேவ் (40) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். * ஒருநாள் போட்டியில் இங்கு அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் வங்கதேசத்தின் முகமது ரபிக் (8 விக்.,) முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் அகார்கர், தென் ஆப்ரிக்காவின் மார்னே மார்கல் தலா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.  652 கடந்த 1985ல் இந்தியாவுக்கு...