இந்திய அணியில் சேவக், ஜாகிர், யுவராஜ் - வங்கதேச தொடரில் வாய்ப்பு

வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் சேவக், ஜாகிர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் உள்ளிட்ட , ‘சீனியர்களுக்கு’ வாய்ப்பு தரப்படும் எனத் தெரிகிறது.       

எட்டாவது ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின், ஜூன் 7ல் இந்திய அணி வங்கதேசம் செல்கிறது. இங்கு ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.    
   
இதற்கான இந்திய அணி வரும் 20ம் தேதி தேர்வு செய்யப்படுகிறது. கோஹ்லி உள்ளிட்ட பல வீரர்கள், இத்தொடரில் இருந்து தங்களுக்கு ஓய்வு தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.       

இத்தொடரில் சேவக், ஜாகிர் கான், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் என, ‘சீனியர்’ வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படும் எனத் தெரிகிறது.       

2011 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல உதவியாக இருந்தவர்கள் இவர்கள் தான். பின் மோசமான ‘பார்ம்’, போதிய உடற்தகுதியின்மை போன்ற காரணங்களால் அணியில் சேர்க்கப்படவில்லை.      
இருப்பினும், ஐ.பி.எல்., தொடரில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இவர்களுக்கு கவுரமான முறையில் விடைகொடுக்கும் பொருட்டு,  வங்கதேச தொடருக்கான அணியில் சேர்க்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டுள்ளது.      

இதுகுறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியது:      

இந்திய அணி 2011ல் உலக கோப்பை வென்றதில் இந்த நான்கு வீரர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. இதனால், இவர்களுக்கு வங்கதேச தொடரில் வாய்ப்பு கொடுத்து, கவுரமான முறையில் விடை கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.  
     
சிலர் இது உணர்ச்சி வசமான முடிவு என்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் ஏன் அப்படி செய்யக் கூடாது. இம்முடிவு தற்போது தேசிய தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.       

அவர்களது முடிவைப் பொறுத்து முழு தொடரிலும் விளையாடுவதா அல்லது ஒரு சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பதா என முடிவாகும். இருப்பினும், சிலர் டெஸ்ட் போட்டிக்கு மட்டும், வேறு சிலர் ஒருநாள் தொடருக்கும் தேர்வு செய்யப்படுவர்.       


இது சரியா?      

இந்த நான்கு வீரர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு தருவது சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஏனெனில், இந்த ஐ.பி.எல்., தொடரில் யுவராஜ் சிங், 13 போட்டியில் 237 ரன்தான் எடுத்துள்ளார்.       

8 போட்டியில் 99 ரன் மட்டும் எடுத்ததால், பஞ்சாப் அணியில் சேவக்கை சேர்க்க மறுக்கின்றனர். இருப்பினும், டெஸ்ட் அரங்கில் இரு முறை 300க்கும் மேல் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற அடிப்படையில் வாய்ப்பு கிடைக்கலாம்.      
ஜாகிர் கானை பொறுத்தவரையில் காயத்தில் இருந்து மீண்டு, ஐ.பி.எல்., தொடரில் (6 போட்டி, 7 விக்.,) நன்றாக செயல்படுகிறார். மும்பை அணியில் ஹர்பஜன் சிங்கும் (12ல் 13 விக்.,) பரவாயில்லை என்பதால், வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

ஏணி வைத்தாலும் எட்டாது - 632 மடங்கு அதிகம்

உலக கோப்பை தொடரின் அரையிறுதியுடன் திரும்பிய இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ. 5.4 கோடி கிடைத்தது. அதேநேரம் கடந்த 1983ல் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 18.8 லட்சம் தான் கிடைத்தது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் சமீபத்தில் உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 24.7 கோடி (லீக் சுற்று செயல்பாடு சேர்த்து) கிடைத்தது. பைனலில் வீழ்ந்த நியூசிலாந்து அணி ரூ. 12.6 கோடி பெற்றது.

லீக் சுற்றில் தொடர்ச்சியான 6 வெற்றியுடன் காலிறுதியில் அசத்திய இந்திய அணி, அரையிறுதியில் வீழ்ந்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.5.4 கோடி கிடைத்தது. மற்றொரு அரையிறுதியில் வீழ்ந்த தென் ஆப்ரிக்கா, லீக் சுற்றில் இந்தியாவுடன் தோற்றது. இதனால், இந்த அணிக்கு ரூ. 4.9 கோடி மட்டும் கிடைத்தது.

காலிறுதியில் தோற்ற பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ரூ. 3 கோடி பெற்றன. மற்ற இரண்டு காலிறுதியில் வீழ்ந்த வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு லீக் சுற்று வெற்றி, தோல்வியையும் சேர்த்து ரூ. 2.9 கோடி, ரூ. 2.7 கோடி கிடைத்தன.

லீக் சுற்றுடன் திரும்பிய அணிகளில் அயர்லாந்துக்கு அதிகபட்சமாக ரூ. 1.1 கோடி கிடைத்தது. இங்கிலாந்து ரூ. 78 லட்சம், ஜிம்பாப்வே, ஆப்கன் தலா ரூ. 50 லட்சம் பெற்றன. இத்தொடரில் ஒரு வெற்றி கூட பெறாத ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு ரூ. 22 லட்சம் கிடைத்தன.


எட்டாத உயரம்:

அதேநேரம், 1975ல் முதல் உலக கோப்பை தொடரில் கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ. 3.7 லட்சம் கிடைத்தது. 1983ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா ரூ. 18.8 லட்சம் மட்டும் பெற்றது.

அதேநேரம். இப்போது சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி, முதல் உலக கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை விட, 632 மடங்கு அதிகமாக பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. முதல் மற்றும் தற்போதைய தொடர் பரிசுப் பணத்தை பார்த்தால் ஏணி வைத்தாலும் எட்டாது.

உலக கோப்பை பைனலில் அரங்கேறிய சாதனைகள்

கடந்த 1987ல் இந்தியா, 1999ல் இங்கிலாந்து, 2003ல் தென் ஆப்ரிக்கா, 2007ல் வெஸ்ட் இண்டீஸ், 2015ல் ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.

* தவிர, சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. கடந்த 2011ல் இந்திய அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்றது.


நான்காவது கேப்டன்

ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த 4வது கேப்டன் என்ற பெருமை பெற்றார் மைக்கேல் கிளார்க். இதற்கு முன், ஆலன் பார்டர் (1987), ஸ்டீவ் வாக் (1999), ரிக்கி பாண்டிங் (2003, 2007) தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


 7

இதுவரை நடந்த 11 உலக கோப்பை பைனலில், 7 முறை (1975, 79, 83, 99, 2003, 2011, 2015) ‘டாஸ்’ வென்ற அணி தோல்வியை சந்தித்தது. நான்கு முறை (1987, 1992, 1996, 2007) வெற்றி பெற்றன.


‘டக்–அவுட்’ சோகம்

இம்முறை அதிக முறை ‘டக்–அவுட்’ ஆனவர்கள் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ.,) கிருஷ்ண சந்திரன் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் 3 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், இங்கிலாந்தின் இயான் மார்கன், வெஸ்ட் இண்டீசின் ராம்தின், இலங்கையின் தில்ஷன் உள்ளிட்டோர் தலா 2 முறை ‘டக்–அவுட்’ ஆனார்கள்.


ஹாடின் ‘டாப்’

அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாடின் முதலிடம் பிடித்தார். இவர், 8 போட்டியில் 16 முறை விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். 

இவரை அடுத்து இந்தியாவின் தோனி (15), வெஸ்ட் இண்டீசின் ராம்தின் (13), நியூசிலாந்தின் ரான்கி (13) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டனர்.


9

அதிக ‘கேட்ச்’ பிடித்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ரூசோவ் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 6 போட்டியில் 9 ‘கேட்ச்’ பிடித்தார். இந்தியாவின் உமேஷ் யாதவ் (8), இங்கிலாந்தின் ஜோ ரூட் (7), ஷிகர் தவான் (7) உள்ளிட்டோரும் பீல்டிங்கில் அசத்தினர்.


‘ஸ்டார்’ ஸ்டார்க்

இம்முறை சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் வென்றார். இவர், 8 போட்டியில் 22 விக்கெட் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருது வென்ற இரண்டாவது ஆஸ்திரேலிய வீரரானார். கடந்த 2007ல் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (26 விக்.,) இவ்விருது வென்றார்.


இரண்டு ‘ஹாட்ரிக்’

இம்முறை இரண்டு பவுலர்கள் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டீவன் பின், இலங்கைக்கு எதிரான காலிறுதியில் தென் ஆப்ரிக்காவின் டுமினி, இம்மைல்கல்லை எட்டினர்.

* இதுவரை, உலக கோப்பை அரங்கில் 9 முறை ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் லசித் மலிங்கா இரண்டு முறை (2007, 2011) இந்த இலக்கை எட்டினார்.

உலக கோப்பை வென்றது ஆஸி - 5 முறை சாம்பியனாகி சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் நியூசி., நிர்ணயித்த குறைந்த இலக்கான 183 ரன்னை ஆஸி., மிக எளிதாக அடைந்து உலக கோப்பையை தட்டி சென்றது. இதன் மூலம் 5வது முறையாக ஆஸி., உலக கோப்பையை வென்றுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் , ஆஸி.,க்கு மிக சொற்ப அளவிலான இலக்கையே நியூஸிலாந்து நிர்ணயித்து. இதனால் ஆஸி., மிக எளிதாக எதிர்கொள்ளும் என்ற சூழலே ஏற்பட்டது. நியூஸிலாந்து விக்கெட்டுகளை ஆஸி., வீரர்கள் மள,மளவென சரித்தனர். 

நியூஸி 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன் எடுத்தது. ஆஸி,.க்கு ரன் இலக்கு 184 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களம் இறங்கிய ஆஸி., நிதானமாக ஆடியது. 33.1 வது ஓவரில் ஆஸி., 3 விக்கெட் இழந்து 184 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.


(1987, 1999, 2003, 2007, 2015):  

சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பி்ன்ச் (0) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய டேவிட் வானர் (45) அரைசத வாய்ப்பை இழந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் மைக்கேல் கிளார்க் (74), ஸ்டீவ் ஸ்மித் (55*) அரைசதமடித்தனர்.

ஆஸ்திரேலிய அணி 33. ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் (55), வாட்சன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ஹென்ரி 2, பவுல்ட் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின்மூலம், உலக கோப்பை அரங்கில் ஆஸ்திரேலிய அணி 5வது முறையாக (1987, 1999, 2003, 2007, 2015) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதித்தது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று நடக்கும் பைனலில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


விறு விறுப்பு இல்லாத உலக கோப்பை : 

முதலில் களம் இறங்கிய நியூஸி., வீரர்கள் மிட்சல் ஸ்டார்க் 'வேகத்தில்' கேப்டன் பிரண்ட மெக்கலம் (0) போல்டானார். மேக்ஸ்வெல்' கப்டில் (15) சிக்கினார். ஜான்சன் பந்தில் வில்லியம்சன் (12) நடையை கட்டினார். 

பொறுப்பாக விளையாடும் எலியட் அரைசதமடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த போது பால்க்னர் பந்தில் ராஸ் டெய்லர் (40) அவுட்டானார். அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் (0), பால்க்னர் பந்தில் போல்டானார் மெக்கலம், ஆண்டர்சன், ராங்கி , ஹென்றி, போல்ட் தலா ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாயினர்.

நியூசிலாந்து அணி 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் பால்க்னர், ஜான்சன் தலா 3, ஸ்டார்க் 2, மேக்ஸ்வெல் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


1983லும் 183- 2015 லும் 183 : 

மூன்றாவது உலகக்கோப்பை ( 1983ல் ) இறுதிப்போட்டியில், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, இருமுறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 குறைந்த ரன் அடித்து, பவுலிங்கில் அசத்திய இந்திய வீரர்கள் கோப்பையை வென்று சாதித்தனர். மூன்றாவது உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதிபெற்ற இந்திய அணி, தான் பங்கேற்ற முதல் இறுதிப்போட்டியிலேயே குறைந்த ரன்கள் அடித்தும், பவுலிங்கில் விஸ்வரூபம் எடுத்து எதிரணியை 140 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தது போன்று, தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டியில் பங்கேற்கும் நியூ., அணியும் 183 ரன்கள் எடுத்துள்ளது.


இறுதிப்போட்டியில் கேப்டன்கள் இன்னிங்ஸ்

உலகக்கோப்பை போட்டியில், தொடர் வெற்றி பெற்ற வந்த நியூ., அணியின் கேப்டன் மெக்கலம், முக்கியமான இறுதிப்போட்டியில், 3 பந்துகளை சந்தித்து, டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். 

ஆஸி., கேப்டன் கிளார்க், 72 பந்துகளை சந்திந்து 74 ரன்கள் குவிந்து, அணி பதற்றமின்றி வெற்றிபெற வழிவகுத்தார்,***
கடைசி போட்டியில் அசத்திய கிளார்க்


மெல்போர்ன்: 

ஆஸி. அணி இதற்கு முன் நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 87ல் ஆலன்பார்டர் தலைமையிலும், 99ல் ஸ்டீவ் வாக் தலைமையிலும், 2003 மற்றும் 2007ல் ரிக்கி பாண்டிங் தலைமையிலும் கோப்பை வென்றுள்ளது. 

இந்த வரிசையில், தற்போது ஆஸி.,க்காக உலகக்கோப்பை வென்று தந்த கேப்டன்கள் வரிசையில், மைக்கேல் கிளார்க்கின் பெயரும் இடம்பெறுகிறது. இறுதிப்போட்டியில், இவர் 72 பந்துகளில் 74 ரன்கள் அடித்து, அவுட்டாகி, தனது கடைசி போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

ரெய்னாவின் புது வியூகம் - பவுன்சரை சமாளிக்க பயிற்சி

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் சாதிக்க, இந்திய அணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஸ்டார்க், ஜான்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பவுலர்களின் ‘பவுன்சர்களை’ சமாளிக்க, டென்னிஸ் பந்துகளை எகிறச் செய்து ரெய்னா பயிற்சியில் ஈடுபட்டார்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், விஷேச திட்டத்துடன் இந்திய வீரர்கள் பயிற்சி செய்கின்றனர். 

பாகிஸ்தானின் 7.1 அடி உயரம் கொண்ட முகமது இர்பானை சமாளிக்க, இரண்டு சிறிய நாற்காலி ‘பார்முலாவை’ பயன்படுத்தி பயிற்சி செய்தனர்.


புதிய திட்டம்:

அடுத்து, சிட்னியில் 26ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க, ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா ஆயத்தமாகிறது.

இங்கு ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக இருக்குமா அல்லது சுழலுக்கு சாதகமாக தொடருமா என, இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களுக்கு ‘பவுன்சர்’ வீசிய ஸ்டார்க், ஜான்சன், ஹேசல்வுட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய அணி பயிற்சியாளர் பிளட்சர், 66, நேற்று புதிய திட்டத்தை கையாண்டார். 

பயிற்சியின் போது ரெய்னாவை மட்டும் தனியாக அழைத்துச் சென்றார். டென்னிஸ் ‘ராக்கெட்டை’ மூலம் ரெய்னாவை நோக்கி டென்னிஸ் பந்தை வேகமாக அடித்தார். இந்த பந்தின் எடை குறைவு என்பதால் தரையில் பட்டு நன்கு உயரமாக முகத்தை நோக்கி வந்தது. 

இதை எப்படி சமாளிப்பது என, பயிற்சியில் ஈடுபட்டார் ரெய்னா. உடலில் படும் படி வந்த பந்துகளை ‘ஹூக் ஷாட்’ அடித்து பழகினார். ஸ்டார்க் வீசுவதைப் போல வேகமாக வந்த பந்துகளை சமாளிக்க முடியாமல்  தடுமாறினார். இதையடுத்து, ரெய்னாவுக்கு உரியா ஆலோசனைகள் வழங்கினார் கேப்டன் தோனி.

இந்த பயிற்சி ரெய்னாவின் ‘ஷார்ட் பிட்ச்’ பலவீனத்தை சரியாக்க உதவும் என, நம்பப்படுகிறது.