Showing posts with label ஒலிம்பிக். Show all posts
Showing posts with label ஒலிம்பிக். Show all posts

ஒலிம்பிக் அரங்கில் மீண்டும் இந்தியா



இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு (ஐ.ஒ.ஏ.,)விதிக்கப்பட்டிருந்த தடையை, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஒ.சி.,) நீக்கியுள்ளது. இதனால், 14 மாதத்திற்கு பின், இந்தியா மீண்டும் ஒலிம்பிக் அரங்கிற்கு திரும்பியுள்ளது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஒ.சி.,) புதிய விதிகளின்படி தேர்தல் நடத்த முன்வராத, இந்திய ஒலிம்பிக் சங்கம்(ஐ.ஒ.ஏ.,) , கடந்த 2012, டிச., 4ல் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 9ம் தேதி, புதிய விதியின் படி, ஐ.ஓ.ஏ., தேர்தல் நடந்தது. 


ராமச்சந்திரன் தேர்வு:

இதில், இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு தலைவராக உள்ள ராமச்சந்திரன், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தவிர, புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

தங்களின் விதிப்படி, தேர்தல் நடத்தியதால், சர்வதேச ஒலிம்பிக் சங்கம், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை இன்று நீக்கியது. இது, இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இது குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஒ.ஏ., செயலாளர் ராஜிவ் மேத்தா கூறுகையில்,‘‘ சர்வதேச ஒலிம்பிக் சங்கம், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக தொலைபேசியில் தெரிவித்தது,’’ என்றார். 


மூவர்ணக்கொடி:

தடை நீக்கப்பட்டதால், தற்போது சோச்சியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் பங்கேற்கலாம். 

குளிர்கால ஒலிம்பிக் கோலாகல துவக்கம்



குளிர்கால ஒலிம்பிக் போட்டி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று கோலாகலமாக துவங்கியது.

ரஷ்யாவின் சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நேற்று துவங்கியது. இதில், 88 நாடுகளை சேர்ந்த 2800க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

இதன் துவக்க விழா வண்ணமயமாக நடந்தது. ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று ரஷ்யாவின் பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 

ஆடல், பாடல், ‘லேசர் ஷோ’, வாணவேடிக்கை என நிகழ்ச்சிகள் களை கட்டின. 


இந்தியா பரிதாபம்:

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறைப்படி தேர்தலை நடத்தாத, இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) தடை செய்யப்பட்டது. 

இதனால், நேற்றைய அணிவகுப்பின் போது ஷிவ் கேசவன், ஹமிான்சு தாகூர் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடி ஏந்தி வராதது பெரும் அவமானமாக அமைந்தது. 

இவர்கள் ‘சுதந்திரமான வீரர்கள்’ என்ற அடிப்படையில் ஒலிம்பிக் கொடியுடன் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.