Showing posts with label ஐ.சி.சி. Show all posts
Showing posts with label ஐ.சி.சி. Show all posts

வீரர்கள் தேர்வு - கோபத்தில் காம்பிர்

டில்லி அணியில் தனக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யாத கோபத்தில் காம்பிர் உள்ளதாக தெரிகிறது.
இந்திய அணி வீரர் காம்பிர். "பார்ம்' இல்லாமல் தவித்ததால், ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். டில்லி அணியின் கேப்டனாக உள்ளார். 

இந்நிலையில், நாளை துவங்கும் ஐந்தாவது லீக் போட்டியில் ஒடிசாவை சந்திக்கிறது. இதற்கான அணி தேர்வுக்கூட்டத்தில் காம்பிர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. 

இது குறித்து டில்லி கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" கேப்டன் காம்பிர் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்களை கேட்டார். 

"பவுலர்' மனோஜ் சவுகான் இடம்பெற வேண்டும் என விரும்பினார். தேர்வாளர்களோ, மோகித் சர்மாவுக்கு வாய்ப்பு தந்ததாக தெரிகிறது. இதனால், காம்பிர் கோபத்தில் உள்ளார்,'' என்றார்.

டில்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சவுகான் கூறுகையில்,"" 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளோம். 

வருண் மற்றும் மனான் சர்மா என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். காம்பிருடன் கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது,'' என்றார். 

இந்திய அணிக்கு ஸ்பான்சர் யார்?

இந்திய அணிக்கு புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்ய, ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' சகாரா நிறுவனம் கடந்த 2001, ஜூன் 2ல் ரூ. 4723 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
கடந்த 11 ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பயிற்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் "சகாரா' பெயர் கொண்ட "ஜெர்சி' இல்லாமல் பார்க்கவே முடியாது. 

பின், 2008ல் பிரிமியர் தொடர் துவங்கப்பட்ட போது, ஒரு அணியை வாங்க முயற்சித்தது சகாரா. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி இம்முயற்சிக்கு முட்டுக்கட்டை இட்டது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,).

பின் 2010ல் ஒருவழியாக புனே பிரிமியர் அணியை வாங்கியது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ.,யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இந்தியா மற்றும் புனே அணியின் "ஸ்பான்சரில்' இருந்து விலகுவதாக, கடந்த பிப்., 4ல் நடந்தது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த அக்., 27ல் புனே அணி உரிமத்தை, பி.சி.சி.ஐ., ரத்து செய்தது. இப்போது 9 மாதங்கள் கழித்து, இந்திய அணிக்கு புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்ய ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் வெளியிட்ட அறிக்கை:

இந்திய ஆண்கள், 19 வயது, "ஏ' அணி மற்றும் பெண்கள் அணிக்கு, 2014, ஜன. 1 முதல் 2017, மார்ச் 31 வரை "ஸ்பான்சர்' செய்ய, புதிய ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்காக, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள விண்ணப்பங்கள், மும்பை வான்கடே மைதானத்தில் நவ., 11 முதல் டிச., 7 வரை கிடைக்கும். இவை டிச., 9, மதியம் 3.00 மணி வரை ஏற்கப்படும். அன்று ஒப்பந்தங்கள் சரிபார்க்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட "ஸ்பான்சர்' அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி., ரேங்கிங் - இந்தியா நம்பர் 1



ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112) அணிகள் உள்ளன.


கோஹ்லி "நம்பர்-4':

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் தோனி 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 16வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவிலியர்ஸ், இலங்கையின் சங்ககரா உள்ளனர்.


ஜடேஜா "நம்பர்-1':

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் உள்ளார். 

மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 18வது இடத்தில் நீடிக்கிறார்.

"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 3வது இடத்தில் நீடிக்கிறார். முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் உள்ளனர்.

இந்திய அணிகளில் வெளிநாட்டு வீரர்கள்



சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், மைக்கேல் ஹசி, டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் உள்ளூர் அணிக்காக விளையாடாமல், இந்திய அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

இந்தியாவில், சர்வதேச உள்ளூர் சாம்பியன் அணிகள் பங்கேற்கும், ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், செப்.17 முதல் அக்.6 வரை நடக்கிறது. 

இதில், 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.


தகுதி சுற்று:

இந்தியா (3), ஆஸ்திரேலியா (2), தென் ஆப்ரிக்கா (2), வெஸ்ட் இண்டீசை (1) சேர்ந்த 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுகின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 உள்ளூர் அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன. 

ஐதராபாத்தில் செப்.17-20ம் தேதிகளில் நடக்கும் தகுதிச் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.


இரண்டு பிரிவு:

பிரதான சுற்றில், 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். "ஏ' பிரிவில் ராஜஸ்தான், மும்பை, லயன்ஸ், பெர்த் மற்றும் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. "பி' பிரிவில் சென்னை, டைட்டன்ஸ், பிரிஸ்பேன், டிரினிடாட் அண்டு டுபாகோ மற்றும் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. செப்.21ம் தேதி நடக்கவுள்ள "ஏ' பிரிவுக்கான லீக் போட்டியில், ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதுகின்றன.


உத்தேச அணி:

இத்தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும், உத்தேச அணியை அறிவித்தன. பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், தங்கள் நாட்டை சேர்ந்த உள்ளூர் அணிகளிலும் இடம் பெற்றுள்ளனர். இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள 15 வெளிநாட்டு வீரர்களில், 11 பேர் இந்திய அணிக்காக விøளாட உள்ளனர். 

இலங்கையின் சங்ககரா (கந்துரதா மரோன்ஸ்), நுவன் குலசேகரா (கந்துரதா மரோன்ஸ்), ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் (பெர்த்), தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் (லயன்ஸ்) ஆகியோர் மட்டும், உள்ளூர் அணிக்கு விளையாட முடிவு செய்துள்ளார்.

இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களை, தங்களது அணிக்காக விøளாட தேர்வு செய்யும் இந்திய அணிகள், சாம்பியன்ஸ் லீக் விதிமுறைப்படி, வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ள உள்ளூர் அணிகளுக்கு நஷ்ட ஈடாக, ஒரு வீரருக்கு தலா ரூ. ஒரு கோடி வரை கொடுக்க வேண்டும்.

இந்திய அணிக்காக விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்:

வெஸ்ட் இண்டீஸ்: டுவைன் பிராவோ (சென்னை), கெவான் கூப்பர் (ராஜஸ்தான்), போலார்டு (மும்பை).

தென் ஆப்ரிக்கா: டுபிளசி (சென்னை), ஆல்பி மார்கல் (சென்னை), கிறிஸ் மோரிஸ் (சென்னை).

ஆஸ்திரேலியா: நாதன் கவுல்டர்-நைல் (மும்பை), மைக்கேல் ஹசி (சென்னை), மிட்சல் ஜான்சன் (மும்பை), ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்).

இலங்கை: திசாரா பெரேரா (ஐதராபாத்).


சச்சின் பங்கேற்பாரா

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த மும்பை அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுகிறார். கடந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் பங்கேற்கவில்லை. இவர், சமீபத்தில் முடிந்த கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், 7 போட்டியில் 41 ரன்கள் மட்டும் எடுத்தார். 

மும்பை அணிக்காக மட்டும் விளையாடும் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, தனது மனைவியின் பிரசவத்துக்காக இத்தொடரில் பங்கேற்கவில்லை. இதேபோல, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு, இது கடைசி தொடர்.

இங்கிலாந்து கவுன்டி அணியில் காம்பிர்



இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில், எசக்ஸ் அணிக்காக விளையாட இந்திய வீரர் கவுதம் காம்பிர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்திய அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பிர், 31. இதுவரை 54 டெஸ்ட் (4021 ரன்கள்), 147 ஒருநாள் (5238 ரன்கள்), 37 சர்வதேச "டுவென்டி-20' (932 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். 

சமீபகாலமாக மோசமான "பார்ம்' காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கிறார். 

இந்நிலையில் இவர், இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட சசக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

இவர், நியூசிலாந்தின் ஹமிஷ் ரூதர்போர்டுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரூதர்போர்டு, நியூசிலாந்தில் நடக்கவுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சென்றுவிட்டார்.

இதனையடுத்து காம்பிர், வரும் ஆக., 20ம் தேதி கோல்செஸ்டர் நகரில் நடக்கவுள்ள நார்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2 போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து காம்பிர், தனது "டுவிட்டர்' இணைய தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ரசிகர்களுக்கு நற்செய்தி, இன்று முதல் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளேன். இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டியில், சசக்ஸ் அணிக்காக விளையாட உள்ளேன்,' என, தெரிவித்தார்.

இப்போட்டியில் காம்பிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், மீண்டும் இந்தியாவுக்காக விரைவில் விளையாடலாம்.

இக்கட்டான நிலைமையில் கிரிக்கெட் வாரியம்

ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) விசாரணை குழு சட்ட விரோதமானது என்று மும்பை ஐகோர்ட்டு நேற்று அதிரடியாக அறிவித்தது. புதிய குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டது. 

இது பி.சி.சி.ஐ.க்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவர் டால்மியாவிடம் இதுகுறித்து கேட்டபோது, எனக்கு இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை. இதனால் அதுபற்றி கூற இயலாது. ஆனால் கிரிக்கெட் வாரியம் தற்போது இக்கட்டான நிலைமையில் இருக்கிறது என்றார்.

கோப்பை வெல்வாரா கோஹ்லி? ஜிம்பாப்வே புறப்பட்டது இந்தியா



ஒருநாள் தொடரில் பங்கேற்கும் விராத் கோஹ்லி தலைமையிலான இளம் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வே புறப்பட்டது. 

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்பு தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. அடுத்து, ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. 

இதற்காக, கோஹ்லி தலைமையிலான அணியினர் நேற்று, மும்பையில் இருந்து ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றனர். தோனி, அஷ்வின், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர், உமேஷ் யாதவ் உள்ளிட்ட "சீனியர்' வீரர்களுக்கு இம்முறை ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அரங்கில் "கத்துக்குட்டியான' ஜிம்பாப்வே அணி, அவ்வப்போது எதிரணிகளுக்கு "ஷாக்' கொடுக்கும். உதாரணமாக 1983ல் நடந்த உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அடுத்து நடந்த போட்டியில் இந்திய அணியை தனது மிரட்டல் பந்துவீச்சால் திணறடித்தது. ஒருகட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்து தவித்தது. பின் கபில்தேவ் 175 ரன்கள் விளாசி, அணியை மீட்டார். 

தொடர்ந்து 1999ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி, இந்தியாவை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2002ல் பரிதாபாத்தில் நடந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 275 ரன்களை விரட்டிய ஜிம்பாப்வே அணி, 8 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின் டக்கி மரிலியர், தைபு சேர்ந்து அதிசயம் நிகழ்த்தினர். 24 பந்துகளில் 56 ரன்கள் விளாசிய மரிலியர், ஜிம்பாப்வே அணிக்கு இந்திய மண்ணில் முதல் வெற்றி தேடித்தந்தார்.

சமீப காலமாக பார்த்தால், ஜிம்பாப்வே அணி சொதப்புகிறது. டெஸ்ட் அந்தஸ்தை கூட சில ஆண்டுகளுக்கு(2005-11) இழந்தது. ஆனாலும், தற்போதைய இந்திய அணி அனுபவம் இல்லாதது. இதனை பயன்படுத்திக் கொண்டு எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது. எனவே, கோஹ்லி துடிப்பாக வியூகம் அமைத்து இந்திய அணிக்கு கோப்பை பெற்றுத்தர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அணி விவரம்: கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், புஜாரா, ரெய்னா, அம்பதி ராயுடு, ரகானே, ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது ஷமி, வினய் குமார், உனத்கத், மோகித் சர்மா. 

தென் ஆப்ரிக்கா தொடர் - பி.சி.சி.ஐ., எதிர்ப்பு



இந்திய அணி பங்கேற்கும் போட்டி அட்டவணையை, தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் வெளியிட்ட தென் ஆப்ரிக்காவுக்கு, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. 

வரும் நவம்பர் முதல் 2014 ஜனவரி வரை (60 நாட்கள்) தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, இரண்டு "டுவென்டி-20', ஏழு ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. 

இதுகுறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் இந்தியா வந்த தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) நிர்வாகிகள், இத்தொடர் குறித்து விவாதித்தனர். இதனிடையே, போட்டிகள் நடக்கும் தேதி மற்றும் இடங்கள் குறித்த அறிவிப்பை, சி.எஸ்.ஏ., வெளியிட்டது.

இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே தெரிவித்தபடி தான் அட்டவணை வெளியாகியுள்ளது என்றாலும், என்ன காரணத்துக்காக எதிர்க்கின்றனர் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. 

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,"" சி.எஸ்.ஏ., வெளியிட்ட அட்டவணை குறித்து எதுவும் தெரியாது. எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் வெளியிட்டுள்ளனர். இது சரியல்ல. இதுகுறித்து சி.எஸ்.ஏ.,யிடம் பேசும் முன், தற்காலிக தலைவர் டால்மியாவிடம் பேசவுள்ளேன்,'' என்றார். 

பி.சி.சி.ஐ., எதிர்ப்பு குறித்து சி.எஸ்.ஏ., செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.


காரணம் என்ன:

இப்போதுள்ள அட்டவணைப் படி, தென் ஆப்ரிக்க தொடர் முடிந்து (2014, ஜன., 19) அடுத்த ஆறு நாட்களில் (2014, ஜன., 25), நியூசிலாந்து மண்ணில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இது மிகவும் சிரமம் என்பதால், பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் என்று நம்பப்படுகிறது.

டெஸ்ட் ரேங்கிங்கில் இந்தியா முன்னேற்றம்

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. 

டெஸ்ட் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. இதில் இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி (112) மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இந்திய அணி (116 புள்ளி) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இப்பட்டியலில், தென் ஆப்ரிக்கா (135) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய (105), பாகிஸ்தான் (102), வெஸ்ட் இண்டீஸ் (99) ஆகிய அணிகள் முறையே நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடத்தை பிடித்தன. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 அல்லது அதற்கு மேல் கைப்பற்றும் பட்சத்தில், மீண்டும் "நம்பர்-2' இடத்துக்கு முன்னேறலாம்.

2015 உலக கோப்பைக்கு தோனி தான் கேப்டன்



இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு அதிசயங்கள் நிகழ்த்திய தோனி, வரும் 2015ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கும் கேப்டனாக நீடிக்கலாம்,'' என, முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார். 

சாம்பியன்ஸ் டிராபியை(மினி உலக கோப்பை)தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இவரையும் முன்னாள் கேப்டன் கங்குலியையும் ஒப்பிட்டு பேசுகின்றனர். 

இது குறித்து கங்குலி கூறியது:

பொதுவாக ஜூன் மாதம் என்பது இந்திய கிரிக்கெட்டுக்கு பல இனிய நினைவுகளை கொடுத்துள்ளது. 30 ஆண்டுக்கு முன் லார்ட்சில் இந்திய அணி, முதல் உலக கோப்பை கைப்பற்றியது. இதன் பின் இந்திய கிரிக்கெட்டின் முகம் மாறியது. 

இதன் பின் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து அசத்தியது. இதில் யார் சிறந்த கேப்டன் என்று பார்ப்பது தவறு. ஏனெனில், கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு. இதில் கேப்டன்கள், வீரர்கள் வரலாம், போகலாம். ஆனால், சிறந்த வீரர்களை உருவாக்கினால் தான், நல்ல முடிவு கிடைக்கும்.


ஒப்பிட வேண்டாம்:

இந்நிலையில், தோனியுடன் என்னை ஒப்பிட்டு பேசுகின்றனர். இது ஏன் என்று தான் தெரியவில்லை. என்னை அவருடன் ஒப்பிட முடியும் என்றே நான் நினைக்கவில்லை. ஏனெனில், இதை நான் நம்புவதில்லை. ஒவ்வொருவருக்கும் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்திருக்கும். 

தோனியை பொறுத்தவரையில் சிறப்பான கேப்டன். தனது பணியில் வியக்கத்தக்க சாதனைகள் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு அதிசயங்கள் நிகழ்த்தியுள்ளார். இன்னும் அவரிடம் ஏராளமான கிரிக்கெட் மீதமுள்ளது. 


பகட்டு இல்லாதவர்:

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போல தோனியும் இளம் வீரர்களை நன்கு ஊக்கப்படுத்தி வருகிறார். ரெய்னா, ஜடேஜா, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தோனியால் அடையாளம் காணப்பட்டவர்கள் தான். 

இவரை பார்ப்பதற்கு அமைதியாக இருப்பது போலத் தெரியும். ஆனால், அவருக்குள் ஏராளமான நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். தேவையற்ற பரபரப்பு, பகட்டு இல்லாதவர். எது எப்படி இருப்பினும், இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனைகள் படைத்துள்ளார்.


மீண்டும் கோப்பை:

வரும் 2015 உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பது அவரது முடிவு தான். இருப்பினும், இந்த தொடரையும் வெல்ல வேண்டும் என்ற எண்ணம், தோனியின் மனதில் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 

இன்னும் இளமையாக உள்ள இவர், அசத்தலான ஒருநாள் வீரர். இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக, தோனி இருக்கக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. 

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

அதிகம் சம்பாதிக்கும் தோனி



அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், 31வது இடத்தில் இருந்து, 16வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் தோனி. 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, அனைத்துவித, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளவர் தோனி. கடந்த 2007 ("டுவென்டி-20'), 2011 ல் உலக கோப்பை வென்று தந்தார். 

சமீபகாலமாக அதிக சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவர் சுயநலத்துடன் செயல்பட்டு சம்பாதிப்பதில் ஆர்வம் உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை உண்மையாக்கும் வகையில், பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன்படி, உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில், கடந்த ஆண்டினை விட, 15 இடங்கள் முன்னேறி, 16வது இடத்தை பெற்றுள்ளார் தோனி. இந்திய அளவில் "டாப்பில்' உள்ள இவரது ஆண்டு வருமானம் ரூ. 179 கோடி. இதில் போட்டிகளில் கிடைத்த சம்பளம் ரூ. 20 கோடி தான். மற்ற அனைத்தும் பல்வேறு தொழில்கள் மூலம் கிடைத்த வரவு. 


முதலிடத்தில் உட்ஸ்:

கடந்த முதலிடத்தில் இருந்த டென்னிஸ் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை (ரூ. 406 கோடி), பின் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் (ரூ. 444 கோடி). 

கால்பந்து வீரர்கள் இங்கிலாந்தின் டேவிட் பெக்காம் (ரூ. 268 கோடி), போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரூ. 250 கோடி), அர்ஜென்டினாவின் மெஸ்சி (ரூ. 235 கோடி) ஆகியோர் 8, 9, 10வது இடத்தில் உள்ளனர்.


சச்சின் "51':

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா (ரூ. 165 கோடி), செர்பிய வீரர் ஜோகோவிச் (ரூ. 153 கோடி), ஸ்பெயினின் நடால் (ரூ. 150 கோடி) முறையே 22, 28, 30வது இடத்தை பெற்றுள்ளனர். 

ரூ. 138 கோடி சம்பாதிக்கும் தடகள வீரர் உசைன் போல்ட் (ஜமைக்கா), 40வது இடத்திலுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், 51வது இடம் தான் (ரூ. 125 கோடி) கிடைத்துள்ளது. 

மீண்டும் விளாசுவாரா கெய்ல்?


மும்பையில் இன்று நடக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில், கெய்ல் மீண்டும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பெங்களூரு அணியின் பலமே கெய்ல்தான். புனே அணிக்கு எதிராக 30 பந்தில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவரது சிறப்பான "பார்ம்' இன்றும் தொடரலாம். 

இவருக்கு பக்கபலமாக, கேப்டன் கோஹ்லி உள்ளார். சவுரப் திவாரி, அருண் கார்த்திக் ஆகியோர் தங்களது பங்களிப்பை கொடுத்தால் நல்லது. 

வேகப்பந்துவீச்சில் அசத்த வினய் குமார், ராம்பால், ஆர்.பி.சிங் உள்ளனர். தவிர, உனத்கத்தும் அசத்துவது கூடுதல் பலம். 


ஸ்மித் அசத்தல்: 

ஏற்கனவே கோல்கட்டா அணியை அதன் சொந்த மண்ணில் வென்ற உற்சாகத்தில் உள்ளது மும்பை அணி. கடந்த போட்டியில் சிறப்பான அடித்தளம் அமைத்த டுவைன் ஸ்மித் இன்றும் மிரட்டலாம். 

சச்சின் திறமை நிரூபிக்க வேண்டும். பாண்டிங்கிற்கு பதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா, கடந்த போட்டியில் அற்புதமாக செயல்பட்டார். இவருக்கு தினேஷ் கார்த்திக் கைகொடுக்கலாம். 

பவுலிங்கில் மலிங்கா, ஜான்சன் உள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ஏழு போட்டியில் ஆறு விக்கெட் மட்டும் வீழ்த்தியுள்ளார். 

இவர் இன்றாவது, ஜாலம் காட்டுவாரா என பார்ப்போம். பிரக்யான் ஓஜா விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை அளிக்கிறார். 

தெண்டுல்கரை முந்திய ரோகித் சர்மா


ஐ.பி.எல். போட்டியில் நேற்று ரோகித் சர்மா 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் தெண்டுல்கரை முந்தினார். 

ரெய்னா 2294 ரன் எடுத்து (84 ஆட்டம்) முதல் இடத்திலும், காம்பீர் 2187 ரன் எடுத்து (75 ஆட்டம்), 2-வது இடத்திலும் ரோகித் சர்மா 2130 ரன் எடுத்து (82 ஆட்டம்) 3-வது இடத்திலும் உள்ளனர். 

தெண்டுல்கர் 2115 ரன்களுடனும் (68 ஆட்டம்), காலிஸ் 2004 ரன்களுடனும் (77 ஆட்டம்) அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். 

கிறிஸ்கெய்ல் 2 ஆயிரம் ரன்னை தொட 1 ரன்னே தேவை. அவர் 48 ஆட்டத்தில் 1999 ரன் எடுத்துள்ளார். கெய்ல் விளையாடும் அடுத்த ஆட்டத்தில் 2 ஆயிரம் ரன்னை தொடுகிறார்.

இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமில்லை


இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனினும் வளர்ந்து வரும் வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுக்க சில காலம் ஆகும் என்று ஐசிசி மற்றும் பிசிசிஐயின் முன்னாள் தலைவரான சரத் பவார் தெரிவித்தார்.

தொடர் தோல்விகளால் இந்திய அணி துவண்டு வரும் நிலையில், இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்தியாவில் ஏராளமான திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.

எனினும் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. ஒரு காலத்தில் மும்பை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் இருந்து மட்டும்தான் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவெடுத்தனர்.

தற்போது உத்தரப் பிரேதசம், ஜார்க்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்க கொஞ்ச நாள்கள் ஆகும். இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமிருப்பதாக நினைக்கவில்லை என்றார்.

தோனி தொடர்ந்து முதலிடம்

ஐ.சி.சி., ஒரு நாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணி கேப்டன் தோனி தொடர்ந்து முதலாவது இடத்தில் உள்ளார். யுவராஜ் மற்றும் காம்பிர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் புதிய ரேங்கிங் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தோனி, 817 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். 2வது இடத்துக்கு ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி (801) முன்னேறியுள்ளார். 3வது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (749) உள்ளார்.

யுவராஜ் பின்னடைவு:

ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு 2வது இடத்தில் இருந்த யுவராஜ், 5 இடங்கள் பின்தங்கி 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 9 மற்றும் 11 வது இடத்தில் சச்சின் மற்றும் சேவக் உள்ளனர். மற்றொரு இந்திய வீரர் காம்பிர், இலங்கையின் ஜெயசூர்யாவுடன் 19வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹர்பஜன் முன்னேற்றம்:

பவுங்கில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், 8வது இடத்தை பாகிஸ்தானின் அப்ரிதியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதல் 3 இடங்களில் நியூசிலாந்தின் வெட்டோரி, வங்க தேசத்தில் ஷாகிப் அல் ஹசன், தென் ஆப்ரிக்காவின் பிரைஸ் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்தலாக செயல்பட்ட ஆஸ்திரேலிய வீரர் போலிங்கர், 52 இடங்கள் முன்னேறி 69 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்