மீண்டும் முதல் ஓவரிலேயே பவுன்சர் வீசிய அபாட்

மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கிய சியான் அபாட், முதல் ஓவரிலேிய ‘பவுன்சர்’ வீசி அதிர்ச்சி அளித்தார்.

உள்ளூர் போட்டியில், நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’ தாக்கியதில் காயமடைந்த, தெற்கு ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியுஸ் சிகிச்சை பலனின்றி மரணடைந்தார். இந்த துயர சம்பவத்தால் அபாட், பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதிலிருந்து மெல்ல மீண்ட இவர், நேற்று சிட்னியில் துவங்கிய ‘ஷெப்பீல்டு ஷீல்டு’ போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் சார்பில் பங்கேற்றார். 

தனது முதல் ஓவரில் 5வது பந்தை பவுன்சராக வீசி, குயீன்ஸ்லாந்து வீரர்களை மிரட்டினார். இப்போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய அபாட் சகஜ நிலைமைக்கு திரும்பியதை உறுதி செய்தார்.


ஹியுசிற்கு கவுரவம்:

முன்பு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்காக 707வது வீரராக களம் கண்டார் ஹியுஸ். இதனை உணர்த்தும்விதமாக நேற்று நியூ சவுத் வேல்ஸ் அணியினர் கையில் கருப்பு பட்டை மற்றும் ஜெர்சியில் ‘707’ என்ற நம்பருடன் விளையாடினர்.

0 comments:

Post a Comment